MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.47 திருச்சிரபுரம்
    பண் - பழந்தக்கராகம்

    504 பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்
    வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே
    சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்
    செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே. 1.47.1
    505 கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய்
    அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்
    சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்
    செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே. 1.47.2
    506 நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
    ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே
    காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
    சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே. 1.47.3
    507 கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்
    மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே
    கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்
    செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே. 1.47.4
    508 புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னைக்
    கரமெடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே
    மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்
    சிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே. 1.47.5
    509 கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்
    பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே
    எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த்
    திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே. 1.47.6
    510 குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்
    பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே
    இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து
    சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே. 1.47.7
    511 மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால்
    நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்
    துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்
    சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே. 1.47.8
    512 மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
    சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
    நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச்
    சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே. 1.47.9
    513 புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்
    பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்
    மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே
    சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே. 1.47.10
    514 தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை
    அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை
    பங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்
    சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே. 1.47.11

    சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர்.
    திருச்சிற்றம்பலம்