MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.51 திருச்சோபுரம்
    பண் - பழந்தக்கராகம்

    548 வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி
    மங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங்
    கங்கையோடு திங்கள்சூடிக் கடிகம ழுங்கொன்றைத்
    தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே. 1.51.1
    549 விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு
    சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கிய தென்னைகொலாங்
    கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத்
    தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுர மேயவனே. 1.51.2
    550 தீயராய வல்லரக்கர் செந்தழ லுள்ளழுந்தச்
    சாயவெய்து வானவரைத் தாங்கிய தென்னைகாலாம்
    பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித் தோலுடுத்த
    தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே. 1.513
    551 பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை யும்பலிதேர்ந்
    தல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம்
    வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடுந்
    தொல்லையூழி யாகிநின்றாய் சோபுர மேயவனே. 1.51.4
    552 நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம்
    ஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம்
    ஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளித்
    தோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே. 1.51.5
    553 கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன்
    பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம்
    அன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர்
    துன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே. 1.51.6
    554 குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார்
    கற்றல்கேள்வி ஞானமான காரண மென்னைகொலாம்
    வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில்
    துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே. 1.51.7
    555 விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர்
    குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையி தென்னைகொலாம்
    இலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால்
    துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே. 1.51.8
    556 விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி விரிதிரைநீர்
    கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரண மென்னைகொலாம்
    இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர் மேலயனுந்
    தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுர மேயவனே. 1.51.9
    557 புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேரைத்துப்
    பித்தராகக் கண்டுகந்த பெற்றிமை யென்னைகொலாம்
    மத்தயானை யீருரிவை போர்த்து வளர்சடைமேல்
    துத்திநாகஞ் சூடினானே சோபுர மேயவனே. 1.51.10
    558 சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச்
    சீலமிக்க தொல்புகழார் சிரபுரக் கோன்நலத்தான்
    ஞாலம்மிக்க தண்டமிழான் ஞானசம் பந்தன்சொன்ன
    கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே. 1.51.11

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சோபுரநாதர், தேவியார் - சோபுரநாயகியம்மை

    திருச்சிற்றம்பலம்