MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.55 திருமாற்பேறு
    பண் - பழந்தக்கராகம்

    591 ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை
    நீறு சேர்திரு மேனியர்
    சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்
    மாறி லாமணி கண்டரே. 1.55.1
    592 தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
    அடைவா ராமடி கள்ளென
    மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
    றுடையீ ரேயுமை யுள்கியே. 1.55.2
    593 பையா ரும்மர வங்கொடு வாட்டிய
    கையா னென்று வணங்குவர்
    மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
    ஐயா நின்னடி யார்களே. 1.55.3
    594 சால மாமலர் கொண்டு சரணென்று
    மேலை யார்கள் விரும்புவர்
    மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
    நீல மார்கண்ட நின்னையே. 1.55.4
    595 மாறி லாமணி யேயென்று வானவர்
    ஏற வேமிக ஏத்துவர்
    கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
    நீற னேயென்று நின்னையே. 1.55.5
    596 உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப்
    பரவா தாரில்லை நாள்களும்
    திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்
    றரையா னேயருள் நல்கிடே. 1.55.6
    () இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 1.55.7
    597 அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை
    உரைகெ டுத்தவன் ஒல்கிட
    வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்
    பரவி டக்கெடும் பாவமே. 1.55.8
    598 இருவர் தேவருந் தேடித் திரிந்தினி
    ஒருவ ராலறி வொண்ணிலன்
    மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப்
    பரவு வார்வினை பாறுமே. 1.55.9
    599 தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்
    நீசர் தம்முரை கொள்ளெலுந்
    தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்
    ஈச னென்றெடுத் தேத்துமே. 1.55.10
    600 மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
    மன்னும் மாற்பேற் றடிகளை
    மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
    பன்ன வேவினை பாறுமே. 1.55.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்