MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.62 திருக்கோளிலி
    பண் - பழந்தக்கராகம்

    667 நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
    ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங்
    கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
    கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே. 1.62.1
    668 ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த
    தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
    பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
    கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே. 1.62.2
    669 நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
    டொன்றிவழி பாடுசெய லுற்றவன்றன் ஓங்குயிர்மேல்
    கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்
    கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே. 1.62.3
    670 வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ்
    சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
    தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்
    கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே. 1.62.4
    671 வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால்
    நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்
    பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான்
    கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே. 1.62.5
    672 தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை
    ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்
    நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
    கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே. 1.62.6
    673 கன்னவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான்
    சொன்னவிலும் மாமறையான் தோத்திரஞ்செய் வாயினுளான்
    மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினிற்
    கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே. 1.62.7
    674 அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்பச்
    சுந்தரத்தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து
    மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானுங்
    கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. 1.62.8
    675 நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்
    தாணுவெனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை
    பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
    கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. 1.62.9
    676 தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல்
    இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே ஏத்துமின்கள்
    நடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல்
    கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே. 1.62.10
    677 நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங்
    கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை
    வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண்
    டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே. 1.62.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கோளிலியப்பர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.

    திருச்சிற்றம்பலம்