MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  



    1.68 திருக்கயிலாயம்
    பண் - தக்கேசி

    733 பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல்திகழ்மார்பில்
    கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர்கண்டத்தர்
    இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்குமுனைச்சாரல்
    கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலைமலையாரே. 1.68.1
    734 புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர்மொழிமங்கை
    தெரியவுருவில் வைத்துகந்த தேவர்பெருமானார்
    பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கவிருள்கூர்ந்த
    கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே. 1.68.2
    735 மாவினுரிவை மங்கைவெருவ மூடிமுடிதன்மேல்
    மேவுமதியும் நதியும்வைத்த விளைவர்கழலுன்னுந்
    தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல்முகவன்சேர்
    காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலைமலையாரே. 1.68.3
    736 முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர்மதனன்றன்
    தென்னீருருவம் அழியத்திருக்கண் சிவந்தநுதலினார்
    மன்னீணர்மடுவும் படுகல்லறையின் உழுவைசினங்கொண்டு
    கன்னீணர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலைமலையாரே. 1.68.4
    737 ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல்சேர்வார்
    நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித்திரண்டெங்குந்
    தென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல்நெறியோடிக்
    கன்றும்பிடியும் அடிவாரஞ்சேர் கயிலைமலையாரே. 1.68.5
    738 தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப்
    போதார்பாக மாகவைத்த புனிதர்பனிமல்கும்
    மூதாருலகில் முனிவருடனாய் அறநான்கருள்செய்த
    காதார்குழையர் வேதத்திரளர் கயிலைமலையாரே. 1.68.6
    () இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.68.7
    734 தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண்பகழியால்
    எடுத்தான்றிரள்தோள் முடிகள்பத்தும் இடியவிரல்வைத்தார்
    கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகிவருங்கூற்றைக்
    கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலைமலையாரே. 1.68.8
    740 ஊணாப்பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம்
    பூணாணார மாகப்பூண்டார் புகழுமிருவர்தாம்
    பேணாவோடி நேடவெங்கும் பிறங்குமெரியாகிக்
    காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலைமலையாரே. 1.68.9
    741 விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச்சாக்கியர்
    பொருதுபகரும் மொழியைக்கொள்ளார் புகழ்வார்க்கணியராய்
    எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண்டிகழ்வார்கள்
    கருதும்வண்ணம் உடையார்போலுங் கயிலைமலையாரே. 1.68.10
    742 போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார்சம்பந்தன்
    காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலைமலையார்மேல்
    தேராவுரைத்த செஞ்சொல்மாலை செப்புமடியார்மேல்
    வாராபிணிகள் வானோருலகில் மருவும்மனத்தாரே. 1.68.11

    சுவாமிபெயர் - கயிலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.

    திருச்சிற்றம்பலம்