MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.86 திருநல்லூர்
    பண் - குறிஞ்சி

    926 கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
    நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
    முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
    பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே. 1.86.1
    927 ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும்
    வேறும் முடனுமாம் விகிர்தர் அவரென்ன
    நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
    கூறு மடியார்கட் கடையா குற்றமே. 1.86.2
    928 சூடும் இளந்திங்கள் சுடர் பொற்சடைதாழ
    ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை
    நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
    பாடும் மடியார்கட் கடையா பாவமே. 1.86.3
    929 நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
    நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
    காத்த நெறியானைக் கைகூப்பித் தொழு
    தேத்தும் அடியார்கட் கில்லை யிடர்தானே. 1.86.4
    930 ஆகத் துமைகேள்வன் அரவச் சடைதாழ
    நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்
    தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர்
    போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே. 1.86.5
    931 கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச
    நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்
    செல்லும் நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச்
    சொல்லு மடியார்கள் அறியார் துக்கமே. 1.86.6
    932 எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும்
    நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லா
    தங்கை தலைக்கேற்றி ஆளென் றடிநீழல்
    தங்கும் மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே. 1.86.7
    933 காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக்கோன்
    நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை
    ஏம மனத்தாராய் இகழா தெழுந்தொண்டர்
    தீப மனத்தார்கள் அறியார் தீயவே. 1.86.8
    934 வண்ண மலரானும் வையம் அளந்தானும்
    நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத்
    தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த
    எண்ணும் அடியார்கட் கில்லை யிடுக்கணே. 1.86.9
    935 பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்
    நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை
    நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
    எச்சும் அடியார்கட் கில்லை யிடர்தானே. 1.86.10
    936 தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன்
    நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை
    வண்ணம் புனைமாலை வைகலேத்துவார்
    விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே. 1.86.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர், தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.

    திருச்சிற்றம்பலம்