MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.88 திரு ஆப்பனூர்
    பண் - குறிஞ்சி

    948 முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்
    ஒற்றைப் படவரவம் அதுகொண் டரைக்கணிந்தான்
    செற்றமில் சீரானைத் திருஆப்ப னூரானைப்
    பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.1
    949 குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
    விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
    அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
    பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.2
    950 முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
    பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
    அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
    பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.3
    951 பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
    துணியின் உடைதாழச் சுடரேந்தி யாடுவான்
    அணியும் புனலானை அணியாப்ப னூரானைப்
    பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.4
    952 தகர மணியருவித் தடமால்வரை சிலையா
    நகர மொருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான்
    அகர முதலானை அணியாப்ப னூரானைப்
    பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.5
    953 ஓடுந் திரிபுரங்கள் உடனே யுலந்தவியக்
    காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்
    ஆடுந் தொழிலானை அணியாப்ப னூரானைப்
    பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.6
    954 இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்
    கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட
    இயலும் இசையானை எழிலாப்ப னூரானைப்
    பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.7
    955 கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
    உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
    அரக்கன் றிறலழித்தான் அணியாப்ப னூரானைப்
    பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.8
    956 கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
    அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
    எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னூரானைப்
    பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே. 1.88.9
    957 செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
    பொய்யர் புறங்கூறப் புரிந்தவடியாரை
    ஐயம் அகற்றுவான் அணியாப்ப னூரானைப்
    பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே. 1.88.10
    958 அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய
    சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை
    நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன்
    சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே. 1.88.11

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஆப்பனூரீசுவரர், தேவியார் - அம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்