MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.96 திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள்
    பண் - குறிஞ்சி

    1036 மன்னி யூரிறை, சென்னி யார்பிறை
    அன்னி யூரமர், மன்னு சோதியே. 1.96.1
    1037 பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க்
    குழகன் சேவடி, தொழுது வாழ்மினே. 1.96.2
    1038 நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச்
    சோதி நாமமே, ஓதி உய்ம்மினே. 1.96.3
    1039 பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச்
    சித்தர் தாள்தொழ, முத்த ராவரே. 1.96.4
    1040 நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர்
    மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே. 1.96.5
    1041 இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னியூர்
    நன்பொ னென்னுமின், உம்ப ராகவே. 1.96.6
    1042 அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர்
    எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே. 1.96.7
    1043 தூர்த்த னைச்செற்ற, தீர்த்தன் அன்னியூர்
    ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே. 1.96.8
    1044 இருவர் நாடிய, அரவன் அன்னியூர்
    பரவுவார் விண்ணுக், கொருவ ராவரே. 1.96.9
    1045 குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த்
    தொண்டு ளார்வினை, விண்டு போகுமே. 1.96.10
    1046 பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால்
    வேந்தன் அன்னியூர், சேர்ந்து வாழ்மினே. 1.96.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்