MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.125 திருச்சிவபுரம் - திருவிராகம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1348 கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன்
    முலைமலி தருதிரு வுருவம துடையவன்
    சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
    இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே. 1.125.1
    1349 படரொளி சடையினன் விடையினன் மதிலவை
    சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி
    திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்
    இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே. 1.125.2
    1350 வரைதிரி தரவர வகடழ லெழவரு
    நுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ்
    திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
    உரைதரும் அடியவர் உயர்கதி யினரே. 1.125.3
    1351 துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு
    பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
    தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவிய
    மணிமிட றனதடி இணைதொழு மவரே. 1.125.4
    1352 மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
    நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன்
    இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
    உறைவென உடையவன் எமையுடை யவனே. 1.125.5
    1353 முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்
    ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன்
    எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி
    சதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே. 1.125.6
    1354 வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
    பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன்
    செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
    அடைதரும் அடியவர் அருவினை யிலரே. 1.125.7
    1355 கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன்
    உரம்நெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
    பரனென அடியவர் பணிதரு சிவபுர
    நகரது புகுதல்நம் உயர்கதி யதுவே. 1.125.8
    1356 அன்றிய லுருவுகொள் அரியய னெனுமவர்
    சென்றள விடலரி யவனுறை சிவபுரம்
    என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
    ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே. 1.125.9
    1357 புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை
    வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம்
    இத்தவம் முயல்வுறில் இறைவன சிவபுரம்
    மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே. 1.125.10
    1358 புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
    பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
    எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை
    சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே. 1.125.11

    திருச்சிற்றம்பலம்