MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.11 சீகாழி
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    111 நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
    வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய
    சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்
    இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே. 01
    112 நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற
    பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை
    அம்மானை அந்தணர் சேரு மணிகாழி
    எம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே. 02
    113 அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்
    பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
    விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
    இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே. 03
    114 புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச்
    சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
    அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்
    பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. 04
    115 நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்
    விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
    கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
    பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே. 05
    116 செப்பான மென்முலை யாளைத் திகழ்மேனி
    வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம்
    ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி
    மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே. 06
    117 துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கிய
    இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
    அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய
    நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே. 07
    118 குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும்
    வென்றானை மென்மல ரானொடு மால்தேட
    நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
    நன்றானை நம்பெரு மானை நணுகுமே. 08
    இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 09
    119 சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
    மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
    பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
    கோவாய கொள்கையி னாணடி கூறுமே. 10
    120 கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்
    ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கித்
    தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார
    மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே. 11

    திருச்சிற்றம்பலம்