MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.12 திருவேகம்பம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    121 மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
    பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை
    இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்
    துறைவானை யல்லதுள் காதென துள்ளமே. 01
    122 நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
    உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
    கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை
    நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே. 02
    123 பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி
    சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்
    ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச்
    சேராதார் இன்பமா யந்நெறி சேராரே. 03
    124 குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
    மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
    மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பஞ்
    சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே. 04
    125 சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தங்
    கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள்
    புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்
    உடையானை யல்லதுள் காதென துள்ளமே. 05
    126 மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
    கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
    வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பந்
    தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே. 06
    127 விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார்
    கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
    நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத்
    தண்ணலா ராடுகின் றவலங் காரமே. 07
    128 தூயானைத் தூயவா யம்மறை யோதிய
    வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
    தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
    மேயானை மேவுவா ரென்றலை மேலாரே. 08
    129 நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார்
    பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்
    ஏகம்பம் மேவியா டுமிறை யிருவர்க்கும்
    மாகம்பம் அறியும்வண் ணத்தவ னல்லனே. 09
    130 போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
    வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
    ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
    நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே. 10
    131 அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக்
    கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால்
    சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
    பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே. 11

    திருச்சிற்றம்பலம்