MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.14 திருவெண்ணியூர்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    143 சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா
    உடையானை உடைதலை யிற்பலி கொண்டூரும்
    விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
    உடையானை யல்லதுள் காதென துள்ளமே. 01
    144 சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்
    ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத
    வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
    நீதியை நினையவல் லார்வினை நில்லாவே. 02
    145 கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்
    முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
    நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
    இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே. 03
    146 மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க்
    காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக
    ஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்றன்னை
    ஏத்தாதா ரென்செய்வார் ஏழையப் பேய்களே. 04
    147 நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்
    தாரானைத் தையலோர் பாகமு டையானைச்
    சீரானைத் திகழ்தரு வெண்ணிய மர்ந்துறை
    ஊரானை உள்கவல் லார்வினை யோயுமே. 05
    148 முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்கத்
    தொத்தினைத் துளக்கமில் லாதவி ளக்காய
    வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
    அத்தனை யடையவல் லார்க்கில்லை அல்லலே. 06
    149 காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப்
    பாய்ந்தானைப் பரியகைம் மாவுரித் தோன்மெய்யின்
    மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
    நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே. 07
    150 மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச்
    செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோள்முடி
    இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப்
    பொறுத்தானைப் போற்றுவா ராற்ற லுடையாரே. 08
    151 மண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங்
    கண்ணினைக் கண்ணனும் நான்முகனுங் காணா
    விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
    அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே. 09
    152 குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய
    மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின்
    விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில்
    தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே. 10
    153 மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
    திருவாருந் திகழ்தரு வெண்ணி யமர்ந்தானை
    உருவாரும் ஒண்டமிழ் மாலை யிவைவல்லார்
    பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வெண்ணிநாயகர், தேவியார் - அழகியநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்