MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    21. கோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம்
    (தில்லையில் அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

    உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி
    அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன்உன்
    அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம்
    முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே. 378

    முன்னின் றாண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப்
    பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
    என்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடில் அடியார்
    உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே. 379

    உகந்தானே அன்புடை அடிமைக் குருகாவுள்ளத் துணிர்விலியேன்
    சகந்தான் அறிய முறையிட்டால் தக்கவாறன் றென்னாரோ
    மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்
    முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே. 380

    முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும்
    வழிமுதலேநின் பழவடி யார் திரள்வான் குழுமிக்
    கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்குங்கொல்லோ என்று
    அழுமதுவேயன் றிமந்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே. 381

    அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி
    இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன்
    கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால்
    பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ. 382

    ஏசா நிற்பர் என்னைஉனக் கடியா னென்று பிறரெல்லாம்
    பேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளே
    தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க
    ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே. 383

    இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந்திருப்பேனை
    அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ
    நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும்
    மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென்றருளுவாயே. 384

    அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர்இங்குப்
    பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக்கூத்தா
    மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்துவேனை வாவென்றுன்
    தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ. 385

    சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டுதிரண்டுன் திருவார்த்தை
    விரப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம்
    தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா என்பார் அவர்முன்னே
    தரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே. 386

    நல்கா தொழியான் நமக்கென்றும் நாமம் பிதற்றி நயனனீர்
    மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
    பல்காலுன்னப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே
    ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே. 387

    திருச்சிற்றம்பலம்