MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.16 திருமணஞ்சேரி
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    165 அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து
    குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி
    மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
    பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. 01
    166 விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
    நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
    மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
    பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே. 02
    167 எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
    இப்பாலா யெனையும் ஆள வுரியானை
    வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
    மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே. 03
    168 விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம்
    உடையானை ஊழிதோ றூழி உளதாய
    படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
    அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே. 04
    169 எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்
    வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
    மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்
    செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே. 05
    170 மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
    பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை
    வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி
    இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே. 06
    171 எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
    கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
    மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
    பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே. 07
    172 எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள்
    கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
    மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி
    பிடித்தாரப் பேணவல் லார்பெரியோர்களே. 08
    173 சொல்லானைத் தோற்றங்கண் டானும் நெடுமாலுங்
    கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
    வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி
    எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே. 09
    174 சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்
    சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை
    வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
    பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே. 10
    175 கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
    தண்ணார்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை
    மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
    பண்ணாரப் பாடவல் லார்க்கில்லை பாவமே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மணவாளநாயகர், தேவியார் - யாழ்மொழியம்மை.
    திருச்சிற்றம்பலம்