MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    23. செத்திலாப் பத்து
    சிவானந்தம் - அளவறுக்கொணாமை
    (தில்லையில் அருளியது-
    எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

    பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும்
    புகுமலர்க்கழலிணையடி பிரிந்தும்
    கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ
    விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன்
    ஐயனே அரனே அருப்பெருங் கடலே
    அத்தனே அயன் மாற்கறி யொண்ணாச்
    செய்யமே னியனே செய்வகை அறியேன்
    திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 398

    புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
    உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும்
    மற்றியாரும் நின்மலரடி காணா
    மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
    பற்றினாய் பதையேன் மனமிக உருகேன்
    பரிகிலேன் பரியாவுடல் தன்னைச்
    செற்றிலேன் இன்னுந் திரிதருகின்றேன்
    திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 399

    புலைய னேனையும் பொருளென நினைந்துன்
    அருள்புரிந்தனை புரிதலுங் களித்துத்
    தலையினால் நடந்தேன் விடைப்பாகா
    சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம்
    நிலையனே அலைநீர்விடமுண்ட நித்தனே
    அடையார்புர மெரிந்த
    சிலையனே யெனைச் செத்திடப் பணிவாய்
    திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 400

    அன்பராகிமற் றருந்தவம் முயல்வார்
    அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்
    என்பராய் நினைவார் எனைப்பலர்
    நிற்க இங்கெனை எற்றினுக் கண்டாய்
    வன்பராய் முருடொக்கும் என்சிந்தை
    மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
    தென்பராய்த் துறை யாய் சிவலோகா
    திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 401

    ஆட்டுத்தேவர் தம் விதியொழிந் தன்பால்
    ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்
    நாட்டுத்தேவரும் நாடரும் பொருளே
    நாதனே உனைப் பிரிவறா அருளைப்
    காட்டித்தேவநின் கழலிணை காட்டிக்
    காயமாயத்தைக் கழிந்தருள் செய்யாய்
    சேட்டைத்தேவர்தந் தேவர்பிரானே
    திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 402

    அறுக்கிலேன் உடல்துணிபடத்தீப்புக்
    கார்கிலேன் திருவருள் வகையறியேன்
    பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன்
    போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
    இறக்கிலேன் உனைப்பிரிந்தினிதிருக்க
    எனசெய்கேன்இது செய்க என்றருளாய்
    சிறக்கணே புனல் நிலவிய வயல்சூழ்
    திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 403

    மாயனேமறிகடல்விடம் உண்ட
    வானவாமணி கண்டந்தெம் அமுதே
    நாயினேன் உனைநினையவும் மாட்டேன்
    நமச்சிவாய என் றுன்னடி பணியாய்
    பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய்
    பிறைகுலாஞ்சடைப் பிஞ்ஞகனேயோ
    சேயனாகிநின்றலறுவ தழகோ
    திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 404

    போது சேரயன் பொருகடற் கிடந்தோன்
    புரந்த ராதிகள் நிற்கமற்றென்னைக்
    கோதுமாட்டிநின் குரைகழல் காட்டிக்
    குறிக்கொள் கென்றுநின்தொண்டரிற் கூட்டாய்
    யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே
    அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ
    சீதவார்புனல் நிலவிய வயல்சூழ்
    திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 405

    ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
    நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
    காலன் ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய்
    கங்கை யாய் அங்கி தங்கிய கையாய்
    மாலும் ஓலமிட்டலறும் அம்மலர்க்கே
    மரக்க ணேனேயும் வந்திடப் பணியாய்
    சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
    திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 406

    அளித்துவந்தெனக் காவஎன்றருளி
    அச்சந்தீர்த்தநின் அருட்பெருங்கடலில்
    திளைத்துந்தேக்கியும் பருகியும் உருகேன்
    திருப்பெருந்துறையுறை சிவனே
    வளைக்கை யானொடு மலரவன் அறியா
    வான வாமலை மாதொரு பாகா
    களிப்பெலாம் மிகக் கலங்கிடு கின்றேன்
    கயிலை மாமலை மேவிய கடலே. 407

    திருச்சிற்றம்பலம்