MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.36 திருஇரும்பூளை - வினாவுரை
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    383 சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
    வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
    ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே. 01
    384 தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்
    குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
    எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே. 02
    385 அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
    மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
    இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே. 03
    386 நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
    கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி
    இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே. 04
    387 சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
    நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி
    எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே. 05
    388 தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்
    சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
    ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    காடார் கடுவே டுவனான கருத்தே. 06
    இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
    389 ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர்
    பருக்கை மதவேழ முரித்துமை யோடும்
    இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே. 08
    390 துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்
    கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி
    இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே. 09
    391 துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர்
    பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
    இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே. 10
    392 எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்
    செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார்
    பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - காசியாரண்ணியேசுவரர், தேவியார் - ஏலவார்குழலம்மை.
    திருச்சிற்றம்பலம்