MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.46 திருநாலூர்த்திருமயானம்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    491 பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
    மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
    நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து
    மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே. 01
    492 சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாக
    ஆடும் பறைசங் கொலியோ டழகாக
    நாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தைப்
    பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே. 02
    493 கல்லால் நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்
    றெல்லா அறனுரையும் இன்னருளாற் சொல்லினான்
    நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச்
    சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே. 03
    494 கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான்
    நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
    ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்திற்
    சூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே. 04
    495 கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன்
    பிறையார் வளர்சடையான் பெண்பாகன் நண்பாய
    நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்
    இறையானென் றேத்துவார்க் கெய்துமாம் இன்பமே. 05
    496 கண்ணார் நுதலான் கனலா டிடமாகப்
    பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி
    நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை
    நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே. 06
    497 கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான்
    பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான்
    நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
    எண்பாவு சிந்தையார்க் கேலா இடர்தானே. 07
    498 பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால்
    வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்
    நத்தின் ஒலியோவா நாலூர் மயானத்தென்
    அத்தன் அடிநினைவார்க் கல்லல் அடையாவே. 08
    499 மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய்
    மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்
    நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம்
    பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே. 09
    500 துன்பாய மாசார் துவராய போர்வையார்
    புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
    நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே
    இன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே. 10
    501 ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான்
    நாலு மறையோது நாலூர் மயானத்தைச்
    சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக்
    கேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பலாசவனேசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்