MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.51 திருக்களர்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    546 நீருளார் கயல் வாவி சூழ்பொழில்
    நீண்ட மாவய லீண்டு மாமதில்
    தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்
    ஊரு ளாரிடு பிச்சை பேணும்
    ஒருவனே யொளிர் செஞ்ச டைம்மதி
    ஆரநின் றவனே அடைந்தார்க் கருளாயே. 01
    547 தோளின் மேலொளி நீறு தாங்கிய
    தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
    தாளினார் வளருந் தவமல்கு திருக்களருள்
    வேளின் நேர்விச யற்க ருள்புரி
    வித்த காவிரும் பும்ம டியாரை
    ஆளுகந் தவனே அடைந்தார்க் கருளாயே. 02
    548 பாட வல்லநல் மைந்த ரோடு
    பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
    சேடர் வாழ்பொழில் சூழ்செழுமாடத் திருக்களருள்
    நீட வல்ல நிமல னேயடி
    நிரை கழல்சிலம் பார்க்க மாநடம்
    ஆடவல் லவனே அடைந்தார்க் கருளாயே. 03
    549 அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன்
    ஆடவர் பயில் மாட மாளிகை
    செம்பொனார் பொழில்சூழ்ந் தழகாய திருக்களருள்
    என்பு பூண்டதோர் மேனி யெம்மிறை
    வாஇ ணையடி போற்றி நின்றவர்க்
    கன்புசெய் தவனே அடைந்தார்க் கருளாயே. 04
    550 கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங்
    கிண்டி மாமது வுண்டி சைசெயத்
    தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
    மங்கை தன்னொடுங் கூடிய மண
    வாளனே பிணை கொண்டொர் கைத்தலத்
    தங்கையிற் படையாய் அடைந்தார்க் கருளாயே. 05
    551 கோல மாமயில் ஆலக் கொண்டல்கள்
    சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்
    சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்
    நீல மேவிய கண்டனே நிமிர்
    புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
    ஆலநீழ லுளாய் அடைந்தார்க் கருளாயே. 06
    552 தம்ப லம்மறி யாதவர் மதில்
    தாங்கு மால்வரை யால ழலெழத்
    திண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள்
    வம்ப லர்மலர் தூவி நின்னடி
    வானவர் தொழக் கூத்து கந்துபே
    ரம்பலத் துறைவாய் அடைந்தார்க் கருளாயே. 07
    553 குன்ற டுத்தநன் மாளிகைக் கொடி
    மாட நீடுயர் கோபு ரங்கள்மேல்
    சென்றடுத் துயர்வான் மதிதோயுந் திருக்களருள்
    நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள்
    தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி
    அன்றடர்த் துகந்தாய் அடைந்தார்க் கருளாயே. 08
    554 பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர்
    பாட லாடலொ டார வாழ்பதி
    தெண்ணிலா மதியம் பொழில்சேருந் திருக்களருள்
    உண்ணி லாவிய வொருவ னேயிரு
    வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
    அண்ணலாய எம்மான் அடைந்தார்க் கருளாயே. 09
    555 பாக்கி யம்பல செய்த பத்தர்கள்
    பாட்டொ டும்பல பணிகள் பேணிய
    தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள்
    வாக்கின் நான்மறை யோதி னாயமண்
    தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
    ஆக்கி நின்றவனே அடைந்தார்க் கருளாயே. 10
    556 இந்து வந்தெழு மாட வீதியெ
    ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்
    செந்துநேர் மொழியார் அவர்சேருந் திருக்களருள்
    அந்தி யன்னதொர் மேனி யானை
    அமரர் தம்பெரு மானை ஞானசம்
    பந்தன்சொல் லிவைபத் தும்பாடத் தவமாமே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - களர்முளையீசுவரர், தேவியார் -அழகேசுவரியம்மை.
    திருச்சிற்றம்பலம்