MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.56 திருவிடைமருதூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    601 பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை
    தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்
    எங்குமெழிலார் மறையோர்கள் முறையாலேத்த இடைமருதில்
    மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 01
    602 நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்
    போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர்
    ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர் இடைமருதில்
    சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. 02
    603 அழல்மல்கும் அங்கையி லேந்திப்பூதம் அவைபாடச்
    சுழல்மல்கும் ஆடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
    எழில்மல்கும் நான்மறையோர் முறையாலேத்த இடைமருதில்
    பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே. 03
    604 பொல்லாப் படுதலையொன் றேந்திப்புறங்காட் டாடலீர்
    வில்லாற் புரமூன்றும் எரித்தீர்விடையார் கொடியினீர்
    எல்லாக் கணங்களும் முறையாலேத்த இடைமருதில்
    செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. 04
    605 வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
    பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
    திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்
    பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே. 05
    606 சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர்
    வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயானத் தாடலீர்
    இலமல்கு நான்மறையோ ரினிதாயேத்த இடைமருதில்
    புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே. 06
    607 புனமல்கு கொன்றையீர் புலியின்அதளீர் பொலிவார்ந்த
    சினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர்
    இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில்
    கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே. 07
    608 சிலையுய்த்த வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திறலரக்கன்
    தலைபத்துந் திண்டோ ளும் நெரித்தீர் தையல்பாகத்தீர்
    இலைமொய்த்த தண்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த இடைமருதில்
    நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே. 08
    609 மறைமல்கு நான்முகனும் மாலும்அறியா வண்ணத்தீர்
    கறைமல்கு கண்டத்தீர் கபாலமேந்து கையினீர்
    அறைமல்கு வண்டினங்கள் ஆலுஞ்சோலை இடைமருதில்
    நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே. 09
    610 சின்போர்வைச் சாக்கியரும் மாசுசேருஞ் சமணருந்
    துன்பாய கட்டுரைகள் சொல்லியல்லல் தூற்றவே
    இன்பாய அந்தணர்கள் ஏத்தும்ஏர்கொள் இடைமருதில்
    அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. 10
    611 கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்
    நல்ல அருமறையான் நற்றமிழ்ஞான சம்பந்தன்
    எல்லி இடைமருதில் ஏத்துபாட லிவைபத்துஞ்
    சொல்லு வார்க்குங் கேட்பார்க்குந் துயரமில்லையே. 11

    திருச்சிற்றம்பலம்