MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.60 திருப்பாசூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    644 சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
    வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
    மைந்தர் மணாளர் என்ன மகிழ்வா ரூர்போலும்
    பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே. 01
    645 பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென்
    றாருந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்
    ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்
    பாரின் மிசையார் பாட லோவாப் பாசூரே. 02
    646 கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கள்
    மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விமலனார்
    நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவும் ஊர்போலும்
    பைவாய் நாகங் கோட லீனும் பாசூரே. 03
    647 பொங்கா டரவும் புனலுஞ் சடைமேல் பொலிவெய்தக்
    கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார்
    தங்கா தலியுந் தாமும் வாழும் ஊர்போலும்
    பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே. 04
    648 ஆடற் புரியும் ஐவா யரவொன் றரைச்சாத்தும்
    சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார்
    வாடற் றலையிற் பலிதேர் கையார் ஊர்போலும்
    பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே. 05
    649 கானின் றதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத்
    தோலொன் றுடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள்
    மால்கொண் டோ ட மையல் தீர்ப்பார் ஊர்போலும்
    பால்வெண் மதிதோய் மாடஞ்சூழ்ந்த பாசூரே. 06
    650 கண்ணின் அயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி
    எண்ணுந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்
    உண்ணின் றுருக உவகை தருவார் ஊர்போலும்
    பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே. 07
    651 தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்
    கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
    பேசிப் பிதற்றப் பெருமை தருவார் ஊர்போலும்
    பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே. 08
    652 நகுவாய் மலர்மேல் அயனும் நாகத் தணையானும்
    புகுவா யறியார் புறம்நின் றோரார் போற்றோவார்
    செகுவாய் உகுபற் றலைசேர் கையார் ஊர்போலும்
    பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே. 09
    653 தூய வெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையர்
    நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்
    காவல் வேவக் கணையொன் றெய்தார் ஊர்போலும்
    பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே. 10
    654 ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன்
    தேனும் வண்டும் இன்னிசை பாடுந் திருப்பாசூர்க்
    கானம் முறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்
    ஊனம் இலராய் உம்பர் வானத் துறைவாரே. 11
    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பாசூர்நாதர், தேவியார் - பசுபதிநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
    இரண்டாம் திருமுறை முதல் பகுதி முற்றும்.