MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.75 சீகாழி
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    811 விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப்
    பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற்
    கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள்
    மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே. 01
    812 வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்
    பலிவி ரும்பியதோர் கையினான்பர மேட்டியான்
    கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்
    நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே. 02
    813 சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் வெண்டலைத்
    துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்
    கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள்
    மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் அல்லனே. 03
    814 பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை
    மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங்
    கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள்
    தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே. 04
    815 தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் பூசிப்போய்
    நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாக்
    கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள்
    தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே. 05
    816 சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே
    மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்
    கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள்
    பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே. 06
    817 முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழ
    அடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங்
    கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள்
    கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே. 07
    818 வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடி
    கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள்
    நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே
    தொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே. 08
    819 மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்
    இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர்
    வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை
    கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே. 09
    820 நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர்
    அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான்
    கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள்
    வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே. 10
    821 கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள்
    அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்
    வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார்
    விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே. 11

    திருச்சிற்றம்பலம்