MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.78 திருவிளநகர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    844 ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர்
    குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி
    நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்
    மிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே. 01
    845 அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண்
    டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப்
    புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய
    மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே. 02
    846 வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வேய்த்
    தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட
    காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர்
    மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே. 03
    847 கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார்
    நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார்
    மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
    மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே. 04
    848 பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித்
    துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச்
    சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்
    மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே. 05
    849 தேவரும்மம ரர்களுந் திசைகள்மேலுள தெய்வமும்
    யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார்
    மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும்
    மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே. 06
    850 சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார்
    கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார்
    மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார்
    விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே. 07
    851 படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார்
    அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார்
    விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார்
    மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே. 08
    852 கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார்
    பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார்
    மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
    மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே. 09
    853 உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும்
    உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும்
    உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல்
    உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார்விளநகர் மேயதே. 10
    854 மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய
    நன்பிறைநுதல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர்
    இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த்
    துன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - துறைகாட்டும்வள்ளநாதர், தேவியார் - தோழியம்மை.

    திருச்சிற்றம்பலம்