MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.86 திருநாரையூர்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    930 உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம
    செயல்தீங்கு குற்ற முலகில்
    வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம்
    மிகவேத்தி நித்தம் நினைமின்
    வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து
    வளர்கங்குல் நங்கை வெருவ
    திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழவே. 01
    931 ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற
    பிணிநோ யொருங்கும் உயரும்
    வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி
    விதியான வேத விகிர்தன்
    கானிடை யாடிபூதப் படையா னியங்கு
    விடையான் இலங்கு முடிமேல்
    தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு
    திருநாரை யூர்கை தொழவே. 02
    932 ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன்
    துயருற்ற தீங்கு விரவிப்
    பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை
    ஒழிவுற்ற வண்ண மகலும்
    போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று
    புகழ்வானு ளோர்கள் புணருந்
    தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த
    திருநாரை யூர்கை தொழவே. 03
    933 தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும்
    வினைசெற்ற வுற்ற உலகின்
    தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம்
    நிலையாக நின்று மருவும்
    பேயுற வாயகானில் நடமாடி கோல
    விடமுண்ட கண்டன் முடிமேல்
    தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழவே. 04
    934 வசையப ராதமாய வுவரோத நீங்குந்
    தவமாய தன்மை வரும்வான்
    மிசையவ ராதியாய திருமார் பிலங்கு
    விரிநூலர் விண்ணும் நிலனும்
    இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி
    யமையாத காத லொடுசேர்
    திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழவே. 05
    935 உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம்
    உணர்வாக்கும் உண்மை உலகில்
    குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில்
    நிறைவாற்று நேசம் வளரும்
    மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன்
    அரவார்த்த அண்ணல் கழலே
    திறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற
    திருநாரை யூர்கை தொழவே. 06
    936 தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் குழந்து
    வருதிக் குழன்ற உடலின்
    இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று
    நினைவொன்று சிந்தை பெருகும்
    முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்கச்
    சரமுன் றெரிந்த அவுணர்
    சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழவே. 07
    937 உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம்
    நனியஞ்சு மாத லுறநீர்
    மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின்
    அழிபா டிலாத கடலின்
    அருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம்
    அழியத் தடக்கை முடிகள்
    திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழவே. 08
    938 வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க
    பகைதீர்க்கு மேய வுடலில்
    தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற
    கரவைக் கரந்து திகழுஞ்
    சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத்
    திருமாலும் நேட எரியாய்ச்
    சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழவே. 09
    939 மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம்
    வெளியாக்கு முன்னி யுணரும்
    படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம்
    ஒலிபாடி யாடி பெருமை
    உடையினை விட்டுளோரும் உடல்போர்த் துளோரும்
    உரைமாயும் வண்ணம் அழியச்
    செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழவே. 10
    940 எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை
    பெருமானை உள்கி நினையார்
    திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத்
    திருநாரை யூர்கை தொழுவான்
    பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்
    உரைமாலை பத்தும் மொழிவார்
    திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க
    துளதென்பர் செம்மை யினரே. 11

    திருச்சிற்றம்பலம்