MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.88 திருமுல்லைவாயில்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    952 துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்
    நடமன்னு துன்னு சுடரோன்
    ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த
    உமைபங்க னெங்க ளரனூர்
    களிமண்டு சோலை கழனிக் கலந்த
    கமலங்கள் தங்கு மதுவின்
    தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு
    திருமுல்லை வாயி லிதுவே. 01
    953 பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்
    அயனைப் படைத்த பரமன்
    அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு
    மரவிக்க நின்ற அரனூர்
    உருவத்தின் மிக்க ஒளிர்சங் கொடிப்பி
    யவையோத மோத வெருவித்
    தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள்
    திருமுல்லை வாயி லிதுவே. 02
    954 வாராத நாடன் வருவார்தம் வில்லின்
    உருமெல்கி நாளு முருகில்
    ஆராத வின்ப னகலாத அன்பன்
    அருள்மேவி நின்ற அரனூர்
    பேராத சோதி பிரியாத மார்பின்
    அலர்மேவு பேதை பிரியாள்
    தீராத காதல் நெதிநேர நீடு
    திருமுல்லை வாயி லிதுவே. 03
    955 ஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ டைந்தும்
    இருமூன்றொ டேழு முடனாய்
    அன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும்
    அறியாமை நின்ற அரனூர்
    குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று
    கொடியொன்றொ டொன்று குழுமிச்
    சென்றொன்றொ டொன்று செறிவாய் நிறைந்த
    திருமுல்லை வாயி லிதுவே. 04
    956 கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன்
    விடைநாளும் ஏறு குழகன்
    நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின்
    மதியேறு சென்னி அரனூர்
    அம்பன்ன வொண்க ணவரா டரங்கின்
    அணிகோபு ரங்க ளழகார்
    செம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு
    திருமுல்லை வாயி லிதுவே. 05
    957 ஊனேறு வேலின் உருவேறு கண்ணி
    ஒளியேறு கொண்ட வொருவன்
    ஆனேற தேறி யழகேறு நீறன்
    அரவேறு பூணு மரனூர்
    மானேறு கொல்லை மயிலேறி வந்து
    குயிலேறு சோலை மருவி
    தேனேறு மாவின் வளமேறி யாடு
    திருமுல்லை வாயி லிதுவே. 06
    958 நெஞ்சார நீடு நினைவாரை மூடு
    வினைதேய நின்ற நிமலன்
    அஞ்சாடு சென்னி அரவாடு கையன்
    அனலாடு மேனி யரனூர்
    மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம்
    உளதென்று வைகி வரினுஞ்
    செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள்
    திருமுல்லை வாயி லிதுவே. 07
    959 வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன்
    முடிபத்து மிற்று நெரிய
    உரைவந்த பொன்னின் உருவந்த மேனி
    உமைபங்கன் எங்க ளரனூர்
    வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து
    மிளிர்கின்ற பொன்னி வடபால்
    திரைவந்து வந்து செறிதேற லாடு
    திருமுல்லை வாயி லிதுவே. 08
    960 மேலோடி நீடு விளையாடல் மேவு
    விரிநூலன் வேத முதல்வன்
    பாலாடு மேனி கரியானு முன்னி
    யவர்தேட நின்ற பரனூர்
    காலாடு நீல மலர்துன்றி நின்ற
    கதிரேறு செந்நெல் வயலிற்
    சேலோடு வாளை குதிகொள்ள மல்கு
    திருமுல்லை வாயி லிதுவே. 09
    961 பனைமல்கு திண்கை மதமா வுரித்த
    பரமன்ன நம்ப னடியே
    நினைவன்ன சிந்தை அடையாத தேரர்
    அமண்மாய நின்ற அரனூர்
    வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு
    முகுளங்க ளெங்கு நெரியச்
    சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு
    திருமுல்லை வாயி லிதுவே. 10
    962 அணிகொண்ட கோதை யவள்நன்று மேத்த
    அருள்செய்த எந்தை மருவார்
    திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி
    திருமுல்லை வாயி லிதன்மேல்
    தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான
    மிகுபந்தன் ஒண்டமிழ் களின்
    அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர்
    அகல்வானம் ஆள்வர் மிகவே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - முல்லைவனநாதர், தேவியார் - கோதையம்மை.

    திருச்சிற்றம்பலம்