MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.90 திருநெல்வாயில் திருஅரத்துறை
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    973 எந்தை ஈசனெம் பெருமான்
    ஏறமர் கடவுளென் றேத்திச்
    சிந்தை செய்பவர்க் கல்லால்
    சென்றுகை கூடுவ தன்றாற்
    கந்த மாமல ருந்திக்
    கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
    அந்தண் சோலைநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே. 01
    974 ஈர வார்சடை தன்மேல்
    இளம்பிறை யணிந்த எம்பெருமான்
    சீருஞ் செல்வமும் ஏத்தாச்
    சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
    வாரி மாமல ருந்தி
    வருபுனல் நிவாமல்கு கரைமேல்
    ஆருஞ் சோலைநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே. 02
    975 பிணிக லந்தபுன் சடைமேற்
    பிறையணி சிவனெனப் பேணிப்
    பணிக லந்துசெய் யாத
    பாவிகள் தொழச்செல் வதன்றால்
    மணிக லந்துபொன் னுந்தி
    வருபுனல் நிவாமல்கு கரைமேல்
    அணிக லந்தநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே. 03
    பிணி - கட்டுதல்
    976 துன்ன ஆடையொன் றுடுத்துத்
    தூயவெண் ணீற்றி னராகி
    உன்னி நைபவர்க் கல்லால்
    ஒன்றுங்கை கூடுவ தன்றாற்
    பொன்னும் மாமணி யுந்திப்
    பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
    அன்ன மாருநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே. 04
    977 வெருகு ரிஞ்சுவெங் காட்டி
    லாடிய விமலனென் றுள்கி
    உருகி நைபவர்க் கல்லால்
    ஒன்றுங்கை கூடுவ தன்றால்
    முருகு ரிஞ்சுபூஞ் சோலை
    மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்
    தருகு ரிஞ்சுநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே. 05
    978 உரவு நீர்சடைக் கரந்த
    வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்
    பரவி நைபவர்க் கல்லாற்
    பரிந்துகை கூடுவ தன்றால்
    குரவ நீடுயர் சோலைக்
    குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
    அரவ மாருநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே. 06
    979 நீல மாமணி மிடற்று
    நீறணி சிவனெனப் பேணுஞ்
    சீல மாந்தர்கட் கல்லாற்
    சென்றுகை கூடுவ தன்றால்
    கோல மாமல ருந்திக்
    குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
    ஆலுஞ் சோலைநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே. 07
    980 செழுந்தண் மால்வரை யெடுத்த
    செருவலி இராவணன் அலற
    அழுந்த ஊன்றிய விரலான்
    போற்றியென் பார்க்கல்ல தருளான்
    கொழுங் கனிசுமந் துந்திக்
    குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
    அழுந்துஞ் சோலைநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே. 08
    981 நுணங்கு நூலயன் மாலும்
    இருவரும் நோக்கரி யானை
    வணங்கி நைபவர்க் கல்லால்
    வந்துகை கூடுவ தன்றால்
    மணங்க மழ்ந்துபொன் னுந்தி
    வருபுனல் நிவாமல்கு கரைமேல்
    அணங்குஞ் சோலைநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே. 09
    982 சாக்கி யப்படு வாருஞ்
    சமண்படு வார்களும் மற்றும்
    பாக்கி யப்பட கில்லாப்
    பாவிகள் தொழச்செல்வ தன்றால்
    பூக்க மழ்ந்துபொன் னுந்திப்
    பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
    ஆர்க்குஞ் சோலைநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே. 10
    983 கறையி னார்பொழில் சூழ்ந்த
    காழியுள் ஞான சம்பந்தன்
    அறையும் பூம்புனல் பரந்த
    அரத்துறை யடிகள்தம் அருளை
    முறைமை யாற்சொன்ன பாடல்
    மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
    பறையும் ஐயுற வில்லை
    பாட்டிவை பத்தும் வல்லார்க்கே. 11
    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அரத்துறைநாதர், தேவியார் - ஆனந்தநாயகியம்மை.
    நிவா வென்பது ஒரு நதி. புனல்-நிவாவெனப் பதம்பிரிக்க.
    இது முத்துச்சிவிகை - முத்துச்சின்ன முதலியவை பெற்றபோதருளிச்செய்தது.

    திருச்சிற்றம்பலம்