MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.111 திருவாய்மூர்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1201 தளிரிள வளரென உமைபாடத்
    தாள மிடவோர் கழல்வீசிக்
    கிளரிள மணியர வரையார்த்
    தாடும் வேடக் கிறிமையார்
    விளரிள முலையவர்க் கருள்நல்கி
    வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
    வளரிள மதியமொ டிவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே. 01
    1202 வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
    விரிதரு கோவண வுடைமேலோர்
    பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப்
    பலபல கடைதொறும் பலிதேர்வார்
    சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச்
    செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ
    வந்தனை பலசெய இவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே. 02
    1203 பண்ணிற் பொலிந்த வீணையர்
    பதினெண் கணமு முணராநஞ்
    சுண்ணப் பொலிந்த மிடற்றினார்
    உள்ள முருகி லுடனாவார்
    சுண்ணப் பொடிநீ றணிமார்பர்
    சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற
    வண்ணப் பிறையோ டிவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே. 03
    1204 எரிகிளர் மதியமொ டெழில்நுதல்மேல்
    எறிபொறி யரவினொ டாறுமூழ்க
    விரிகிளர் சடையினர் விடையேறி
    வெருவவந் திடர்செய்த விகிர்தனார்
    புரிகிளர் பொடியணி திருவகலம்
    பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
    வரியர வரைக்கசைத் திவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே. 04
    1205 அஞ்சன மணிவணம் எழில்நிறமா
    வகமிட றணிகொள வுடல்திமில
    நஞ்சினை யமரர்கள் அமுதமென
    நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
    வெஞ்சின மால்களி யானையின்தோல்
    வெருவுறப் போர்த்ததன் நிறமுமஃதே
    வஞ்சனை வடிவினோ டிவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே. 05
    1206 அல்லிய மலர்புல்கு விரிகுழலார்
    கழலிணை யடிநிழ லவைபரவ
    எல்லியம் போதுகொண் டெரியேந்தி
    யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
    சொல்லிய அருமறை யிசைபாடிச்
    சூடிள மதியினர் தோடுபெய்து
    வல்லியந் தோலுடுத் திவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே. 06
    1207 கடிபடு கொன்றைநன் மலர்திகழுங்
    கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
    முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார்
    முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்
    பொடியணி வடிவொடு திருவகலம்
    பொன்னென மிளிர்வதோர் அரவினொடும்
    வடிநுனை மழுவினொ டிவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே. 07
    1208 கட்டிணை புதுமலர் கமழ்கொன்றைக்
    கண்ணியர் வீணையர் தாமுமஃதே
    எட்டுணை சாந்தமொ டுமைதுணையா
    இறைவனா ருறைவதோ ரிடம்வினவில்
    பட்டிணை யகலல்குல் விரிகுழலார்
    பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
    வட்டணை யாடலொ டிவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே. 08
    1209 ஏனம ருப்பினொ டெழிலாமை
    யிசையப் பூண்டோ ரேறேறிக்
    கானம திடமா வுறைகின்ற
    கள்வர் கனவில் துயர்செய்து
    தேனுண மலர்கள் உந்திவிம்மித்
    திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
    வானநன் மதியினோ டிவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே. 09
    1210 சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர்
    சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
    பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார்
    பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
    கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார்
    குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
    வாடல்வெண் டலைபிடித் திவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே. 10
    1211 திங்களோ டருவரைப் பொழிற்சோலைத்
    தேனலங் கானலந் திருவாய்மூர்
    அங்கமோ டருமறை யொலிபாடல்
    அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
    நங்கள்தம் வினைகெட மொழியவல்ல
    ஞானசம் பந்தன் தமிழ்மாலை
    தங்கிய மனத்தினால் தொழுதெழுவார்
    தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர், தேவியார் - பாலினுநன்மொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்