MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.116 திருநாகைக்காரோணம்
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1256 கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலா
    வேனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடை
    வானநாடன் னமரர் பெருமாற் கிடமாவது
    கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 01
    1257 விலங்கலொன்று சிலையா மதில்மூன்றுடன் வீட்டினான்
    இலங்குகண்டத் தெழிலாமை பூண்டாற் கிடமாவது
    மலங்கியோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடற்
    கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 02
    1258 வெறிகொளாருங் கடற்கைதை நெய்தல்விரி பூம்பொழில்
    முறிகொள்ஞாழல் முடப்புன்னை முல்லைம்முகை வெண்மலர்
    நறைகொள்கொன்றைந் நயந்தோங்கு நாதற் கிடமாவது
    கறைகொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 03
    1259 வண்டுபாடவ் வளர்கொன்றை மாலைம்மதி யோடுடன்
    கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள்
    உண்டுபோலும் மெனவைத் துகந்தவ்வொரு வற்கிடம்
    கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 04
    1260 வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந் தேத்தவே
    நீர்கொள்கோலச் சடைநெடுவெண் டிங்கள்நிகழ் வெய்தவே
    போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க் கிடமாவது
    கார்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 05
    1261 விடையதேறிவ் விடவர வசைத்த விகிர்தரவர்
    படைகொள்பூதம் பலபாட ஆடும் பரமாயவர்
    உடைகொள்வேங்கை யுரிதோ லுடையார்க் கிடமாவது
    கடைகொள்செல்வங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 06
    1262 பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும்மலர்ப் பூசனை
    செய்துவாழ்வார் சிவன்சே வடிக்கேசெலுஞ் சிந்தையார்
    எய்தவாழ்வார் எழில்நக்க ரெம்மாற்கிட மாவது
    கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 07
    1263 பத்திரட்டி திரள்தோ ளுடையான்முடி பத்திற
    அத்திரட்டி விரலா லடர்த்தார்க் கிடமாவது
    மைத்திரட்டிவ் வருவெண் டிரைமல்கிய வார்கடல்
    கைத்திரட்டுங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 08
    1264 நல்லபோதில் லுறைவானும் மாலும்நடுக் கத்தினால்
    அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவது
    மல்லலோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடல்
    கல்லலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 09
    1265 உயர்ந்தபோதின் னுருவத் துடைவிட்டுழல் வார்களும்
    பெயர்ந்தமண்டை யிடுபிண்ட மாவுண்டுழல் வார்களும்
    நயந்துகாணா வகைநின்ற நாதர்க் கிடமாவது
    கயங்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 10
    1266 மல்குதண்பூம் புனல்வாய்ந் தொழுகும்வயற் காழியான்
    நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன் நல்லார்கள்முன்
    வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ்
    சொல்லுவார்க்கும் மிவைகேட் பவர்க்குந்துய ரில்லையே. 11

    திருச்சிற்றம்பலம்