MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    32. பிரார்த்தனைப் பத்து
    (திருப்பெருந்துறையில் அருளியது
    - அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

    கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன்
    புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்ற திடர்பின்னாள்
    உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான்
    அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே. 485

    அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமே
    முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன்
    கடியேனுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்க
    உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே. 486

    அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த
    இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே
    மருளார் மனத்தோர் உன்மத்தன் வருவாய் என்றிங் கெனைக்கண்டார்
    வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும்மே. 487

    வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால்
    ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே
    தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல்
    வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே. 488

    மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே
    காவி சேருங் கயற்கண்ணான் பங்கா உன்றன் கருணையினால்
    பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்
    தாவி யாக்கை யானென்தன் றியாது மின்றி அறுதலே. 489

    அறவே பெற்றார் நின்னன்பர் அந்தமின்றி அகநெகவும்
    புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே
    பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாய் பிரிவில்லா
    மறவா நினையா அளவில்லா மாளா இன்ப மாகடலே. 490

    கடலே அனைய ஆனந்தக் கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண
    இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிநாயேன்
    உடையாய் நீயே அருளிதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்
    சுடரார் அருளால் இருள்நீங்கச் சோதி இனித்தான் துணியாயே. 491

    துணியா உருகா அருள்பெருகத் தோன்றும் தொண்டரிடைப்புகுந்து
    திணியார் மூங்கிற் சிந்தையேன் நின்று தேய்நின்றேன்
    அணியா ரடியா ருனக்குள்ள அன்புந் தாராய் அருளளியத்
    தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதந் தாராயே. 492

    தாரா அருளொன் றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம்
    ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ
    சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா
    பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே. 493

    மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனநெகா
    நானோர் தோளாச் சுரையொத்தால் நம்பி இத்தால் வாழ்ந்தாயே
    ஊனே புகுந்த உனையுணர்ந்த உருகிப் பெருகும் உள்ளத்தைக்
    கோனே அருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடிவதே. 494

    கூடிக்கூடி உன்னடியார் குளிப்பார் சிரிப்பார் களிப்பாரா
    வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோ
    ஊடி ஊடி உநடியாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு
    ஆடிஆடி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்தே. 495

    திருச்சிற்றம்பலம்