MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    48. பண்டாய நான்மறை - அனுபவத்து ஐயமின்மை உரைத்தல்
    (திருப்பெருந்துறையில் அருளியது - நேரிசை வெண்பா )

    பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
    கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக்
    கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
    உண்டாமோ கைம்மா றுரை. 628

    உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்
    வெள்ளந் தரும்பரியின் மேல்வந்து வள்ளல்
    மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்காள் வாழ்த்தக்
    கருவுங் கெடும்பிறவிக் காடு. 629

    காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
    நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை வீட்டி
    அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
    மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 630

    வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
    தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர்
    சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
    நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 631

    நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
    எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்
    மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
    கழியா திருந்தவனைக் காண். 632

    காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
    பேணும் அடியார் பிறப்பகலக் காணும்
    பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
    பிரியானை வாயாரப் பேசு. 633

    பேசும் மொருளுக் கிலக்கிதமாய்ப் பேச்சிறந்த
    மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப்
    பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
    மருந்தினடி என்மனத்தே வைத்து. 634

    திருச்சிற்றம்பலம்