MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.28 திருச்சோற்றுத்துறை
    பண் - தக்கராகம்

    294 செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
    துப்ப னென்னா தருளே துணையாக
    ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
    றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.1
    295 பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித்
    தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர்
    மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
    ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.2
    296 செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
    கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
    தைய லாளொர் பாக மாயஎம்
    ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.3
    297 பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர்
    துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்
    மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
    அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.4
    298 பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து
    மறையும் ஓதி மயானம் இடமாக
    உறையுஞ் செல்வம் உடையார் காவிரி
    அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.5
    299 துடிக ளோடு முழவம் விம்மவே
    பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
    படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
    அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.6
    300 சாடிக் காலன் மாளத் தலைமாலை
    சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
    பாடி ஆடிப் பரவு வாருள்ளத்
    தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.7
    301 பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக்
    கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்
    எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய
    அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.8
    302 தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே
    அழலா யோங்கி அருள்கள் செய்தவன்
    விழவார் மறுகில் விதியால் மிக்கஎம்
    எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.9
    303 ()கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்
    ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே
    நீதி நின்று நினைவார் வேடமாம்
    ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே.
    () போதுசாற்றி என்றும் பாடம். 1.28.10
    304 அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச்
    சிந்தை செய்ம்மின் அடியீ ராயினீர்
    சந்தம் பரவு ஞான சம்பந்தன்
    வந்த வாறே புனைதல் வழிபாடே. 1.28.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தொலையாச்செல்வர், தேவியார் - ஒப்பிலாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்