MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.40 திருவாழ்கொளிபுத்தூர் ()
    பண் - தக்கராகம்

    () திருவாளொளிபுற்றூர் என்றும் பாடம்.
    426 பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப்
    பூதகணம் புடை சூழக்
    கொடியுடை யூர்திரிந் தையங்
    கொண்டு பலபல கூறி
    வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம்
    ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
    கடிகமழ் மாமல ரிட்டுக்
    கறைமிடற் றானடி காண்போம். 1.40.1
    427 அரைகெழு கோவண ஆடையின் மேலோர்
    ஆடரவம் அசைத் தையம்
    புரைகெழு வெண்டலை யேந்திப்
    போர்விடை யேறிப் புகழ
    வரைகெழு மங்கைய தாகமொர் பாகம்
    ஆயவன் வாழ்கொளி புத்தூர்
    விரைகெழு மாமலர் தூவி
    விரிசடை யானடி சேர்வோம். 1.40.2
    428 பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப்
    புன்றலை யங்கையி லேந்தி
    ஊணிடு பிச்சையூ ரையம்
    உண்டி யென்று பலகூறி
    வாணெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்
    ஆயவன் வாழ்கொளி புத்தூர்
    தாணெடு மாமல ரிட்டுத்
    தலைவன தாள்நிழல் சார்வோம். 1.40.3
    429 தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை
    தாழ்சடை மேலவை சூடி
    ஊரிடு பிச்சை கொள்செல்வம்
    உண்டி யென்று பலகூறி
    வாரிடு மென்முலை மாதொரு பாகம்
    ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
    காரிடு மாமலர் தூவி
    கறைமிடற் றானடி காண்போம். 1.40.4
    430 கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
    காதிலொர் வெண்குழை யோடு
    புனமலர் மாலை புனைந்தூர்
    புகுதி யென்றே பலகூறி
    வனமுலை மாமலை மங்கையொர் பாகம்
    ஆயவன் வாழ்கொளி புத்தூர்
    இனமல ரேய்ந்தன தூவி
    எம்பெரு மானடி சேர்வோம். 1.40.5
    431 431
    அளைவளர் நாகம் அசைத்தன லாடி
    அலர்மிசை அந்தணன் உச்சிக்
    களைதலை யிற்பலி கொள்ளுங்
    கருத்தனே கள்வனே யென்னா
    ()வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம்
    ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
    தளையவிழ் மாமலர் தூவித்
    தலைவன தாளிணை சார்வோம்.
    () வளையொலி என்றும் பாடம். 1.40.6
    432 அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து
    வழிதலை யங்கையி லேந்தி
    உடலிடு பிச்சை யோடைய
    முண்டி யென்று பலகூறி
    மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம்
    ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
    தடமல ராயின தூவி
    தலைவன தாள்நிழல் சார்வோம். 1.40.7
    433 உயர்வரை யொல்க எடுத்த அரக்கன்
    ஒளிர்கட கக்கை யடர்த்து
    அயலிடு பிச்சை யோடையம்
    ஆர்தலை யென்றடி போற்றி
    வயல்விரி நீல நெடுங்கணி பாகம்
    ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்
    சயவிரி மாமலர் தூவி
    தாழ்சடை யானடி சார்வோம். 1.40.8
    434 கரியவன் நான்முகன் கைதொழு தேத்த
    காணலுஞ் சாரலு மாகா
    எரியுரு வாகி யூரையம்
    இடுபலி யுண்ணி யென்றேத்தி
    வரியர வல்குல் மடந்தையொர் பாகம்
    ஆயவன் வாழ்கொளி புத்தூர்
    விரிமல ராயின தூவி
    விகிர்தன சேவடி சேர்வோம். 1.40.9
    435 குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யில்
    கொள்கை யினார் புறங்கூற
    வெண்டலை யிற்பலி கொண்டல்
    விரும்பினை யென்று விளம்பி
    வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்
    ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
    தொண்டர்கள் மாமலர் தூவத்
    தோன்றி நின்றான் அடிசேர்வோம். 1.40.10
    436 கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்
    கரைபொரு காழிய மூதூர்
    நல்லுயர் நான்மறை நாவின்
    நற்றமிழ் ஞானசம் பந்தன்
    வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்
    வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
    சொல்லிய பாடல்கள் வல்லார்
    துயர்கெடு தல்எளி தாமே. 1.40.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மாணிக்கவண்ணவீசுரர், தேவியார் - வண்டார்பூங்குழலம்மை.

    திருச்சிற்றம்பலம்