MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    கண்ணி நிண்சிறுத்தாம்புத் தனியன்கள்
    ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை

    அவிதிதவிஷயாந்தரச்சடாரே
    ருபநிஷதாமுபகாநமாத்ரபோக:
    அபிசகுணவஸாத் ததேகஸேஷீ
    மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.

    இருகவிற்ப நேரிசை வெண்பா

    வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,
    மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள்
    வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
    ஆள்வார் அவரே யரண்.

    ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த
    கண்ணி நுண்சிறுத்தாம்பு

    937:
    கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
    பண்ணி யபெரு மாயன்,என் னப்பனில்,
    நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்,
    அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. (2) (1)

    938:
    நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்,
    மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே,
    தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி,
    பாவி னின்னிசை பாடித் திரிவனே. (2)

    939:
    திரிதந் தாகிலும் தேவ பிரானுடை,
    கரிய கோலத் திருவுருக் காண்பன்நான்,
    பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்
    உரிய னாய்,அடி யேன்பெற்ற நன்மையே. (3)

    940:
    நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்,
    புன்மை யாகக் கருதுவ ராதலின்,
    அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
    தன்மை யான்,சட கோபனென் நம்பியே. (4)

    941:
    நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்,
    நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்,
    செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்
    கன்ப னாய்,அடி யேஞ்சதிர்த் தேனின்றே. (5)

    942:
    இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்,
    நின்று தன்புக ழேத்த வருளினான்,
    குன்ற மாடத் திருக்கு கூர்நம்பி,
    என்று மென்னை யிகழ்விலன் காண்மினே. (6)

    943:
    கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்,
    பண்டை வல்வினை பாற்றி யருளினான்,
    எண்டி சையு மறிய இயம்புகேன்,
    ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே. (7)

    944:
    அருள்கொண் டாடு மடியவ ரின்புற,
    அருளி னானவ் வருமறை யின்பொருள்,
    அருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான்,
    அருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே. (8)

    945:
    மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்
    நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்,
    தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்கு,ஆட்
    புக்க காத லடிமைப் பயனன்றே? (9)

    946:
    பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
    செயல்நன் றாகத் திருத்திப் பணிகொள்வான்,
    குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி,
    முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே. (2) (10)

    947:
    அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
    அன்பன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு,
    அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்
    நம்பு வார்ப்பதி, வைகுந்தம் காண்மினே. (2) (11)

    ஸ்ரீ மதுகவியாழ்வார் திருவடிகளே சரணம்