MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 2032-2790)
    திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
    பெரிய திருமொழி

    திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ:
    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
    திருக்குறுந்தாண்டகம்

    2032:
    நிதியினைப் பவளத் தூணை
    நெறிமையால் நினைய வல்லார்,
    கதியினைக் கஞ்சன் மாளக்
    கண்டுமுன் ஆண்ட மாளும்,
    மதியினை மாலை வாழ்த்தி
    வணங்கியென் மனத்து வந்த,
    விதியினைக் கண்டு கொண்ட
    தொண்டனேன் விடுகி லேனே (2) 1

    2033:
    காற்றினைப் புனலைத் தீயைக்
    கடிமதி ளிலங்கை செற்ற
    ஏற்றினை, இமயம் மேய
    எழில்மணித் திரளை, இன்ப
    ஆற்றினை அமுதந் தன்னை
    அவுணனா ருயிரை யுண்ட
    கூற்றினை, குணங்கொண் டுள்ளம்
    கூறுநீ கூறு மாறே. 2

    2034:
    பாயிரும் பரவை தன்னுள்
    பருவரை திரித்து, வானோர்க்
    காயிருந் தமுதங்க் கொண்ட
    அப்பனை எம்பி ரானை,
    வேயிருஞ்சோலை சூழ்ந்து
    விரிகதி ரிரிய நின்ற,
    மாயிருஞ்சோலை மேய
    மைந்தனை வணங்கி னேனே. 3

    2035:
    கேட்கயா னுற்ற துண்டு
    கேழலா யுலகங்க் கொண்ட,
    பூக்கெழு வண்ண நாரைப்
    போதரக் கனவில் கண்டு,
    வாக்கினால் கருமந் தன்னால்
    மனத்தினால் சிரத்தை தன்னால்,
    விழுங்கினேற் கினிய வாறே. 4

    2036:
    இரும்பனன் றுண்ட நீர்போல்
    எம்பெரு மானுக்கு, என்றன்
    அரும்பெற லன்பு புக்கிட்
    டடிமைபூண் டுய்ந்து போனேன்,
    வரும்புயல் வண்ண னாரை
    மருவியென் மனத்து வைத்து,
    கரும்பினின் சாறு போலப்
    பருகினேற் கினிய லாறே 5

    2037:
    மூவரில் முதல்வ நாய
    ஒருவனை யுலகங் கொண்ட,
    கோவினைக் குடந்தை மேய
    குருமணித் திரளை, இன்பப்
    பாவினைப் பச்சைத் தேனைப்
    பைம்பொன்னை யமரர் சென்னிப்
    பூவினை, புகழும் தொண்டர்
    எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே? 6

    2038:
    இம்மையை மறுமை தன்னை
    எமக்குவீ டாகி நின்ற,
    மெய்ம்மையை விரிந்த சோலை
    வியந்திரு வரங்கம் மேய,
    செம்மையைக் கருமை தன்னைத்
    திருமலை ஒருமை யானை,
    தன்மையை நினைவா ரென்றன்
    தலைமிசை மன்னு வாரே. 7

    2039:
    வானிடைப் புயலை மாலை
    வரையிடைப் பிரசம் ஈன்ற,
    தேனிடைக் கரும்பின் சாற்றைத்
    திருவினை மருவி வாழார்,
    மானிடப் பிறவி யந்தோ.
    மதிக்கிலர் கொள்க, தந்தம்
    ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்
    குறுதியே வேண்டி னாரே. 8

    2040:
    உள்ளமோ ஒன்றில் நில்லாது
    ஓசையி னெரிநின் றுண்ணும்
    கொள்ளிமே லெறும்பு போலக்
    குழையுமா லென்ற னுள்ளம்,
    தெள்ளியீர். தேவர்க் கெல்லாம்
    தேவரா யுலகம் கொண்ட
    ஒள்ளியீர், உம்மை யல்லால்
    எழுமையும் துணையி லோமே. 9

    2041:
    சித்தமும் செவ்வை நில்லா
    தெஞ்செய்கேன் தீவி னையேன்,
    பத்திமைக் கன்பு டையேன்
    ஆவதே பணியா யந்தாய்,
    முத்தொளி மரத கம்மே.
    முழங்கொளி முகில்வண் ணா,என்
    அத்த.நின் னடிமை யல்லால்
    யாதுமொன் றறிகி லேனே. 10

    2042:
    தொண்டெல்லாம் பரவி நின்னைத்
    தொழுதடி பணியு மாறு
    கண்டு, தான் கவலை தீர்ப்பான்
    ஆவதே பணியா யெந்தாய்,
    அண்டமா யெண்டி சைக்கும்
    ஆதியாய் நீதி யான,
    பண்டமாம் பரம சோதி.
    நின்னையே பரவு வேனே. 11

    2043:
    ஆவியயை யரங்க மாலை
    அழுக்குரம் பெச்சில் வாயால்,
    தூய்மையில் தொண்ட னேன்நான்
    சொல்லினேன் தொல்லை நாமம்,
    பாவியேன் பிழத்த வாறென்
    றஞ்சினேற் கஞ்ச லென்று
    காவிபோல் வண்ணர் வந்தென்
    கண்ணுளே தோன்றினாரே 12

    2044:
    இரும்பனன் றுண்ட நீரும்
    போதரும் கொள்க, என்றன்
    அரும்பிணி பாவ மெல்லாம்
    அகன்றன என்னை விட்டு,
    சுரும்பமர் சோலை சூழ்ந்த
    அரங்கமா கோயில் கொண்ட,
    கரும்பினைக் கண்டு கொண்டென்
    கண்ணிணை களிக்கு மாறே 13

    2045:
    காவியை வென்ற கண்ணார்
    கலவியே கருதி, நாளும்
    பாவியே னாக வெண்ணி
    அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன்,
    தூவிசேர் அன்னம் மன்னும்
    சூழ்புனல் குடந்தை யானை,
    பாவியென் பாவி யாது
    பாவியே னாயி னேனே. 14

    2046:
    முன்பொலா இராவ ணன்றன்
    முதுமதி ளிலங்கை வேவித்து,
    அன்பினா லனுமன் வந்தாங்
    கடியிணை பணிய நின்றார்க்கு,
    என்பெலா முருகி யுக்கிட்
    டென்னுடை நெஞ்ச மென்னும்,
    அன்பினால் ஞான நீர்கொண்
    டாட்டுவ னடிய னேனே. 15

    2047:
    மாயமான் மாயச் செற்று
    மருதிற நடந்து, வையம்
    தாயமா பரவை பொங்கத்
    தடவரை திரித்து, வானோர்க்
    கீயுமால் எம்பி ரானார்க்
    கென்னுடைச் சொற்க ளென்னும்,
    தூயமா மாலை கொண்டு
    சூட்டுவன் தொண்ட னேனே 16

    2048:
    பேசினார் பிறவி நீத்தார்
    பேருளான் பெருமை பேசி,
    ஏச்னார் உய்ந்து போனார்
    என்பதிவ் வுலகின் வண்ணம்,
    பேசினேன் ஏச மாட்டேன்
    பேதையேன் பிறவி நீத்தற்கு,
    ஆசையோ பெரிது கொள்க
    அலைகடல் வண்ணர் பாலே 17

    2049:
    இளைப்பினை யியக்கம் நீக்கி
    யிருந்துமுன் னிமையைக் கூட்டி,
    அளப்பிலைம் புலன டக்கி
    அன்பவர் கண்ணே வைத்து,
    துளக்கமில் சிந்தை செய்து
    தோன்றலும் சுடர்விட்டு, ஆங்கே
    விளக்கினை விதியில் காண்பார்
    மெய்ம்மையே காண்கிற் பாரே 18

    2050:
    பிண்டியார் மண்டை ஏந்திப்
    பிறர்மனை திரிதந் துண்ணும்,
    உண்டியான் சாபம் தீர்த்த
    ஒருவனூர், உலக மேத்தும்
    கண்டியூர் அரங்கம் மெய்யம்
    கச்சிபேர் மல்லை என்று
    மண்டினார், உய்யல் அல்லால்
    மற்றையார்க் குய்ய லாமே? (2) 19

    2051:
    வானவர் தங்கள் கோனும்
    மலர்மிசை அயனும், நாளும்
    தேமலர் தூவி ஏத்தும்
    சேவடிச் செங்கண் மாலை,
    மானவேல் கலியன் சொன்ன
    வண்டமிழ் மாலை நாலைந்தும்,
    ஊனம தின்றி வல்லார்
    ஒளிவிசும் பாள்வர் தாமே (2) 20

    திருமங்கைஆழ்வார் திருவடிகளே சரணம்