MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    ஸ்ரீ:
    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி

    தனியன்
    குருகை காவலப்பன் அருளிச் செய்தது
    நேரிசை வெண்பா
    சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
    காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - ஓராத்
    திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,
    உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.

    2282:
    திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
    அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்
    பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
    என்னாழி வண்ணன்பால் இன்று. (2) 1

    2283:
    இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,
    பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், - அன்று
    திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை
    மருக்கண்டு கொண்டேன் மனம். 2

    2284:
    மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்
    தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், - சினத்துச்
    செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,
    வருநரகம் தீர்க்கும் மருந்து. 3

    2285:
    மருந்தும் பொருளும் அமுதமும் தானே,
    திருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும்
    நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
    அன்றுலகம் தாயோன் அடி. 4

    2286:
    அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,
    படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், - முடிவண்ணம்
    ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே
    ஆராழி கொண்டாற் கழகு? 5

    2287:
    அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்,
    அழகன்றே யண்டம் கடத்தல், - அழகன்றே
    அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ,
    கங்கைநீர் கான்ற கழல்? 6

    2288:
    கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை,
    பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், - எழிலளந்தங்
    கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை,
    நண்ணற் கரியானை நாம். 7

    2289:
    நாமம் பலசொல்லி நாராய ணாவென்று,
    நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. - வா,மருவி
    மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,
    கண்ணனையே காண்கநங் கண். 8

    2290:
    கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்,
    மண்ணளந்த பாதமும் மற்றவையே, எண்ணில்
    கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்,
    திருமா மணிவண்ணன் தேசு. 9

    2291:
    தேசும் திறலும் திருவும் உருவமும்,
    மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில்
    வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத,
    நலம்புரிந்து சென்றடையும் நன்கு. 10

    2292:
    நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும்
    பொங்கோ தருவிப் புனல்வண்ணன், - சங்கோதப்
    பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப் பார்
    _ற்கடலான் _ண்ணறிவி னான். 11

    2293:
    அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,
    செறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும்
    நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோ றும்
    பைங்கோத வண்ணன் படி. 12

    2294:
    படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,
    அடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம்,
    ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,
    மாகாய மாய்நின்ற மாற்கு. 13

    2295:
    மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,
    _ற்பால் மனம்வைக்க நொய்விதாம், நாற்பால
    வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
    பாதத்தான் பாதம் பணிந்து. 14

    2296:
    பணிந்துயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத,
    பணிந்த பணிமணிக ளாலே - அணிந்து,அங்
    கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்
    மனந்த னணைக்கிடக்கும் வந்து. 15

    2297:
    வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
    அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை
    ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
    திருவல்லிக் கேணியான் சென்று. (2) 16

    2298:
    சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,
    என்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும்
    இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,
    மறவாது வாழ்த்துகவென் வாய். 17

    2299:
    வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்
    நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின்
    எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,
    அஞ்சா திருக்க அருள். 18

    2300:
    அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று
    தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத
    சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,
    முந்தையராய் நிற்பார்க்கு முன்? 19

    2301:
    முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால்
    பின்னளந்து கோடல் பெரிதொன்றே? - என்னே
    திருமாலே. செங்க ணெடியானே, எங்கள்
    பெருமானே. நீயிதனைப் பேசு. 20

    2302:
    பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே
    வாச மலர்த்துழாய் மாலையான், - தேசுடைய
    சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்,பொங்கரவ
    வக்கரனைக் கொன்றான் வடிவு. 21

    2303:
    வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்
    கடியார் மலர்தூவிக் காணும் - படியானை,
    செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,
    மெய்ம்மையே காண விரும்பு. 22

    2304:
    விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
    சுரும்பு தொளையில்சென் றூத, அரும்பும்
    புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,
    மனம்துழாய் மாலாய் வரும். 23

    2305:
    வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,
    நெருங்குதீ நீருருவு மானான், - பொருந்தும்
    சுடராழி யொன்றுடையான் சூழ்கழலே, நாளும்
    தொடராழி நெஞ்சே. தொழுது. 24

    2306:
    தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,
    முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, - விழுதுண்ட
    வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்
    சேயானை நெஞ்சே. சிறந்து? 25

    2307:
    சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,
    நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், - உறைந்ததுவும்,
    வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே,
    தாம்கடவார் தண்டுழா யார். 26

    2308:
    ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,
    காரே மலிந்த கருங்கடலை, நேரே
    கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி
    அடைந்தானை நாளும் அடைந்து? 27

    2309:
    அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று
    மிடைந்தது பாரத வெம்போர், - உடைந்ததுவும்
    ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்
    பேய்ச்சிபா லுண்ட பிரான். 28

    2310:
    பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து,
    ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த
    இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய்,
    தெருளா மொழியானைச் சேர்ந்து. 29

    2311:
    சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்
    நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, - வாய்ந்த
    மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,
    இறைபாடி யாய இவை. 30

    2312:
    இவையவன் கோயில் இரணியன தாகம்,
    அவைசெய் தரியுருவ மானான், - செவிதெரியா
    நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான்
    பாகத்தான் பாற்கடலு ளான். 31

    2313:
    பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,
    _ற்கடலும் _ண்ணுல தாமரைமேல், - பாற்பட்
    டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,
    குருந்தொசித்த கோபா லகன். 32

    2314:
    பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்
    மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, - மாலவ
    மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம்
    அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று. 33

    2315:
    அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,
    நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், - அன்று
    கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்
    கடந்தானை நெஞ்சமே. காண். 34

    2316:
    காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு
    பூண்டார் அகலத்தான் பொன்மேனி, - பாண்கண்
    தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற்
    கழல்பாடி யாம்தொழுதும் கை. 35

    2317:
    கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்,
    வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய
    படைபரவ பாழி பனிநீ ருலகம்,
    அடியளந்த மாயன் அவற்கு. 36

    2318:
    அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,
    உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும்
    பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம்,
    திகழும் திருமார்வன் தான். 37

    2319:
    தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்,
    தானே தவவுருவும் தாரகையும், - தானே
    எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
    திருசுடரு மாய இறை. 38

    2320:
    இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
    மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த
    வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
    உள்ளத்தி னுள்ளே உளன். 39

    2321:
    உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்
    உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,
    விண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்,
    மண்ணெடுங்கத் தானளந்த மன். 40

    2322:
    மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,
    துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, - மின்னை
    உடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும்
    குடையாக ஆகாத்த கோ. 41

    2323:
    கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
    மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன், மேவி
    அரியுருவ மாகி இரணியன தாகம்,
    தெரியுகிரால் கீண்டான் சினம். 42

    2324:
    சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து,
    புனமேய பூமி யதனை, - தனமாகப்
    பேரகலத் துள்ளொடுக்கும் பேரார மார்வனார்,
    ஓரகலத் துள்ள துலகு. 43

    2325:
    உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ்
    அலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள்
    பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே,
    பூரித்தென் நெஞ்சே புரி. 44

    2326:
    புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,
    திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர்
    வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள்
    மண்கோட்டுக் கொண்டான் மலை. 45

    2327:
    மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
    தலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட்
    டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்,
    பிண்டமாய் நின்ற பிரான். 46

    2328:
    நின்ற பெருமானே. நீரேற்று, உலகெல்லாம்
    சென்ற பெருமானே. செங்கண்ணா, - அன்று
    துரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள்
    நரகவாய் கீண்டாயும் நீ. 47

    2329:
    நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,
    நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் - நீயன்றே
    மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,
    தேவா சுரம்பொருதாய் செற்று? 48

    2330:
    செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
    பெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் - முற்றல்
    முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய்,மூரிச்
    சுரியேறு சங்கினாய். சூழ்ந்து. 49

    2331:
    சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்,
    தாழ்ந்த அருவித் தடவரைவாய், - ஆழ்ந்த
    மணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்,
    அணிநீல வண்ணத் தவன். 50

    2332:
    அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,
    அவனே யணிமருதம் சாய்த்தான், - அவனே
    கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர்,
    இலங்கா புரமெரித்தான் எய்து. 51

    2333:
    எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்,
    எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், - எய்ததுவும்
    தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்
    முன்னிலம்கைக் கொண்டான் முயன்று. 52

    2334:
    முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை,
    இயன்றமரத் தாலிலையின் மேலால், - பயின்றங்கோர்
    மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்,
    தண்ணலங்கல் மாலையான் தாள். 53

    2335:
    தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி,
    கீளா மருதிடைபோய்க் கேழலாய், - மீளாது
    மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு,
    பெண்ணகலம் காதல் பெரிது. 54

    2336:
    பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு,
    கரிய முகிலிடைமின் போல, - தெரியுங்கால்
    பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன்
    நீணெடுங்கண் காட்டும் நிறம். 55

    2337:
    நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,
    இறையுருவம் யாமறியோ மெண்ணில், - நிறைவுடைய
    நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,
    பூமங்கை கேள்வன் பொலிவு? 56

    2338:
    பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,
    மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்து
    கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,
    தெருடன்மேல் கண்டாய் தெளி. 57

    2339:
    தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,
    அளிந்த கடுவனையே நோக்கி, - விளங்கிய
    வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள்
    மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு. 58

    2340:
    வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,
    தாழும் அருவிபோல் தார்கிடப்ப, - சூழும்
    திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்
    பெருமான் அடிசேரப் பெற்று. 59

    2341:
    பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்,
    முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, - கற்றுக்
    குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப்
    பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு. 60

    2342:
    பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
    கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், - வண்டு
    வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
    இளங்குமரன் றன்விண் ணகர். (2) 61

    2343:
    விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,
    மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
    தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,
    தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. 62

    2344:
    தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,
    சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
    திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
    இரண்டுருவு மொன்றாய் இசைந்து. 63

    2345:
    இசைந்த அரவமும் வெற்பும் கடலும்,
    பசைந்தங் கமுது படுப்ப, - அசைந்து
    கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில்,
    கிடந்திருந்து நின்றதுவும் அங்கு? 64

    2346:
    அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து,
    மங்க இரணியன தாகத்தை, பொங்கி
    அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,
    கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து. 65

    2347:
    காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள்,
    ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, - வாய்ந்த
    மதுகை டவரும் வயிறுருகி மாண்டார்,
    அதுகே டவர்க்கிறுதி ஆங்கே. 66

    2348:
    ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய்,
    ஓங்கு கமலத்தி னொண்போது, - ஆங்கைத்
    திகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில்
    பகரு மதியென்றும் பார்த்து. 67

    2349:
    பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு,
    பேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து, - கார்த்த
    களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்
    விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு. 68

    2350:
    வெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க்
    கற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற
    நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்,
    பூண்டநா ளெல்லாம் புகும். 69

    2351:
    புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி
    உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன்
    விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே,
    கண்டு வணங்கும் களிறு. 70

    2352:
    களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி,
    ஒளிறு மருப்பொசிகை யாளி, - பிளிறி
    விழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள்
    குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று. 71

    2353:
    குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வளைக்கை,
    சென்று விளையாடும் தீங்கழைபோய், - வென்று
    விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே, மேலை
    இளங்குமரர் கோமான் இடம். 72

    2354:
    இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி,
    வடமுக வேங்கடத்து மன்னும், - குடம்நயந்த
    கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே,
    நாத்தன்னா லுள்ள நலம். 73

    2355:
    நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்,
    நிலமே புரண்டுபோய் வீழ, - சலமேதான்
    வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்,
    தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து. 74

    2356:
    சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய்
    ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, - சேர்ந்து
    சினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன்
    புனவேங்கை நாறும் பொருப்பு. 75

    2357:
    பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
    நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா - விருப்புடைய
    வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
    அஃகாவே தீவினைகள் ஆய்ந்து. 76

    2358:
    ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில்
    வாய்ந்த குழவியாய் வாளரக்கன், - ஏய்ந்த
    முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த
    அடிப்போது நங்கட் கரண். 77

    2359:
    அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,
    முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன், - சரணாமேல்
    ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே,
    ஓதுகதி மாயனையே ஓர்த்து. 78

    2360:
    ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,
    பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், - கார்த்த
    விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,
    நிரையார மார்வனையே நின்று. 79

    2361:
    நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்,
    ஒன்றியவீ ரைஞ்_ றுடன்துணிய, - வென்றிலங்கும்
    ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே,
    நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு. 80

    2362:
    நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன்
    நெஞ்சமே. பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப்
    பேராது நிற்கும் பெருமானை என்கொலோ,
    ஓராது நிற்ப துணர்வு? 81

    2363:
    உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
    புணரிலும் காண்பரிய னுண்மை, - இணரணையக்
    கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
    எங்கணைந்து காண்டும் இனி? 82

    2364:
    இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும்,
    இனியவன் காண்பரிய னேலும், - இனியவன்
    கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்,
    உள்ளத்தி னுள்ளே யுளன். 83

    2365:
    உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்
    துளனாகத் தேர்ந்துணர்வ ரேலும், - உளனாய
    வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே,
    கண்டா ருகப்பர் கவி? 84

    2366:
    கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்,
    செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், - புவியினார்
    போற்றி யுரைக்கப் பொலியுமே, - பின்னைக்காய்
    ஏற்றுயிரை அட்டான் எழில்? 85

    2367:
    எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத்
    தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், - எழில் கொண்ட
    நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல,
    கார்வானம் காட்டும் கலந்து. 86

    2368:
    கலந்து மணியிமைக்கும் கண்ணா,நின் மேனி
    மலர்ந்து மரகதமே காட்டும், - நலந்திகழும்
    கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
    அந்திவான் காட்டும் அது. 87

    2369:
    அதுநன் றிதுதீதென் றையப் படாதே,
    மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற
    பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள்
    முன்னங் கழலும் முடிந்து. 88

    2370:
    முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம்
    படிந்துழுசால் பைந்தினைகள் வித்த, - தடிந்தெழுந்த
    வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே, மேலொருநாள்
    தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு. 89

    2371:
    சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா
    றலம்பிய சேவடிபோய், அண்டம் - புலம்பியதோள்
    எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ,
    வண்டுழாய் மாலளந்த மண்? 90

    2372:
    மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,
    வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி - கண்ணிக்
    கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,
    வயிற்றினோ டாற்றா மகன். 91

    2373:
    மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன்,
    மகனா மவன்மகன்றன் காதல் - மகனை
    சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே
    நிறைசெய்தென் நெஞ்சே. நினை. 92

    2374:
    நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,
    அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், - கனைத்துலவு
    வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,
    உள்ளத்தே வைநெஞ்சே. உய்த்து. 93

    2375:
    உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,
    வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே
    நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து,
    பொன்றாமை மாயன் புகுந்து. 94

    2376:
    புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்
    இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்
    சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
    வந்தித்தென் னெஞ்சமே. வாழ்த்து. 95

    2377:
    வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்
    தாழ்த்தி வணங்கத் தழும்பாமே, - கேழ்த்த
    அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்,
    அடித்தா மரையாம் அலர். 96

    2378:
    அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய,
    மலரெடுத்த மாமேனி மாயன், - அலரெடுத்த
    வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட்
    கெண்ணத்தா னாமோ இமை? 97

    2379:
    இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,
    அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ்
    நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,
    துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு. 98

    2380:
    தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,
    அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக்
    கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
    தாள் முதலே நங்கட்குச் சார்வு. (2) 99

    2381:
    சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்
    தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த
    வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,
    தேனமரும் பூமேல் திரு. (2) 100

    பேயாழ்வார் திருவடிகளே சரணம்