MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    நம்மாழ்வார் அருளிச்செய்த
    பெரிய திருவந்தாதி

    தனியன்

    எம்புருமானார் அருளிச்செய்தது

    முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து
    வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த
    முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்
    குருகூரன் மாறன் பேர் கூறு.

    2585:
    முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,
    இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய
    நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்
    பூவீன்ற வண்ணன் புகழ்

    2586:
    புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
    இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம் மற்
    றெங்கள் மால். செங்கண் மால். சீறல்நீ, தீவினையோம்
    எங்கள் மால் கண்டாய் இவை.

    2587:
    இவையன்றே நல்ல இவையன்றே தீய,
    இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம்
    என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,
    என்னால் செயற்பால தென்?

    2588:
    என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்
    றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன
    கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்
    பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று?

    2589:
    பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
    மற்றையா ராவாரும் நீபேசில், எற்றேயோ
    மாய.மா மாயவளை மாயமுலை வாய்வைத்த
    நீயம்மா. காட்டும் நெறி.

    2590:
    நெறிகாட்டி நீக்குதியோ, நின்பால் கருமா
    முறிமேனி காட்டுதியோ, மேனாள்-அறியோமை
    எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே, ஈதுரையாய்
    எஞ்செய்தா லென்படோ ம் யாம்?

    2591:
    யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார்
    தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய
    செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த
    அம்மா. நின் பாதத் தருகு.

    2592:
    அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே
    பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம்
    பண்புடையீர். பாரளந்தீர். பாவியேம்கண் காண்பரிய
    _ண்புடையீர் _ம்மை _மக்கு.

    2593:
    _மக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென், மாலார்
    தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால்?-எமக்கினி
    யாதானு மாகிடுகாண் நெஞ்சே, அவர்த்திறத்தே
    யாதானும் சிந்தித் திரு.

    2594:
    இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ
    டொருநால்வர் ஓரிருவர் அல்லால், திருமாற்கு
    யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே
    நாமா மிகவுடையோம் நாழ்?

    2595:
    நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,
    வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத
    பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,
    நீரும்நீ யாய்நின்ற நீ.

    2596:
    நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்?
    போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும்
    காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள்
    வாழ்த்துவதே கண்டாய் வழக்கு.

    2597:
    வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,
    இழக்கவும் காண்டும் இறைவ.-இழபுண்டே,
    எம்மாட்கொண் டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்
    தம்மால்காட் டுன்மேனிச் சாய்?

    2598:
    சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே,
    பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த்
    தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம்
    பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து.

    2599:
    பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம்
    பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம்
    தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய
    செம்மேனிக் கண்வளர்வார் சீர்.

    2600:
    சீரால் பிறந்து சிறப்பால் வளராது,
    பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப்
    புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே?
    சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து.

    2601:
    சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
    வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும்
    வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய,
    தாள்வரைவில் லேந்தினார் தாம்.

    2602:
    தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக,
    பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப்
    பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன்
    தொல்லுருவை யாரறிவார் சொல்லு?

    2603:
    சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே,
    எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண்
    மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக,
    காத்தானைக் காண்டும்நீ காண்.

    2604:
    காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,
    நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி
    உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,
    திருவாகம் தீண்டிற்றுச் சென்று.

    2605:
    சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
    இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப்
    பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய,
    காருருவன் தன் நிமிர்த்த கால்

    2606:
    காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்,
    மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால்
    தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம், வீற்
    றிருக்குமிடம் காணா திளைத்து.

    2607:
    இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே. சொன்னேன்,
    இளைக்க நமன்தமர்கள் பற்றி-இளைப்பெய்த
    நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,
    தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.

    2608:
    தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்
    தானே பிறர்கட்ட்கும் தற்றோன்றல்,-தானே
    இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்,
    அளக்கிற்பார் பாரின் மேல் ஆர்?

    2609:
    ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை
    ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார்
    மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன், வானோர்
    இனத்தலைவன் கண்ணனால் யான்.

    2610:
    யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்
    கானும் மலையும் புகக்கடிவான்,-தானோர்
    இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,
    அருளென்னும் தண்டால் அடித்து.

    2611:
    அடியால் படிகடந்த முத்தோ,அ தன்றேல்
    முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய்.
    செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம்,
    அறிகிலாமால் நீயளந்த அன்று.

    2612:
    அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,
    இன்றேநாம் காணா திருப்பதுவும்,-என்றேனும்
    கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்
    உட்கண்ணால் காணு முணர்ந்து.

    2613:
    உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே,
    இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத்
    தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்,
    எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு.

    2614:
    இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய
    செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே
    மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்,மீண்
    டடியெடுப்ப தன்றோ அழகு?

    2615:
    அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,
    நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக்
    குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்
    தடங்கடலை மேயார் தமக்கு.

    2616:
    தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்,
    தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று
    தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்,
    யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது?

    2617:
    யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ,
    யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,-யாதானும்
    தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால்
    பாறுபா றாக்கினான் பால்.

    2618:
    பாலாழி நீகிடக்கும் பண்பை, யாம் கேட்டேயும்
    காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச்
    சோதியாய். ஆதியாய். தொல்வினையெம் பால்கடியும்,
    நீதியாய். நிற்சார்ந்து நின்று.

    2619:
    நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்,
    ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை
    வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார் விடந்தான்,
    அன்புடைய னன்றே யவன்?

    2620:
    அவனாம் இவனாம் உவனாம், மற் றும்பர்
    வனாம் அவனென் றிராதே,-அவனாம்
    அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்,
    அவனே எவனேலும் ஆம்.

    2621:
    ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே?
    நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய்
    மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம்
    அதுகரமே அன்பால் அமை.

    2622:
    அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே,
    இமைக்கும் பொழுதும் இடைச்சி-குமைத்திறங்கள்,
    ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே,
    பேசியே போக்காய் பிழை.

    2623:
    பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே. பேசாய்,
    தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால்
    போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே
    வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு?

    2624:
    வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,
    போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால
    பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை
    மாய்த்தானை வாழ்தே வலி.

    2625:
    வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்
    வலிய முடியிடிய வாங்கி,-வலியநின்
    பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,
    பன்னாளும் நிற்குமிப் பார்.

    2626:
    பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
    பாரிடம் முன்படைத்தா னென்பரால்,-பாரிடம்
    ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு
    ஆவான் பூகாவால் அவை.

    2627:
    அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே,
    நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில்
    மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ ,
    மனத்துயரை மாய்க்கும் வகை?

    2628:
    வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,
    மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து
    மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே,
    மேலைத்தாம் செய்யும் வினை?

    2629:
    வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி,
    தினையாம் சிறிதளவும் செல்ல-நினையாது
    வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்,
    நாயகத்தான் பொன்னடிகள் நான்.

    2630:
    நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும்
    தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத
    மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
    நீகதியா நெஞ்சே. நினை.

    2631:
    நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே,
    நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச
    எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும்
    எவ்வளவு முண்டோ எமக்கு?

    2632:
    எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,
    அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப் பொலிந்த
    மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே,
    கொன்றானை யேமனத்துக் கொண்டு?

    2633:
    கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
    வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள்
    காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார்
    பேருருவென் றெம்மைப் பிரிந்து.

    2634:
    பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,
    திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால்
    ஆவா. எனவிரங்கார் அந்தோ. வலிதேகொல்,
    மாவை பிளந்தார் மனம்?

    2635:
    மனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை,
    சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய
    தண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே,
    வண்டுழாம் சீராக்கு மாண்பு?

    2636:
    மாண்பாவித் தந்நான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ்
    சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங்
    கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா
    துண்ணவாய் தானுறுமோ ஒன்று?

    2637:
    ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது, உன்னடியார்க்
    கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில்
    வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு
    வைகுந்த மென்றருளும் வான்?

    2638:
    வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ,
    கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால், ஆனீன்ற
    கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
    வன்துயரை யாவா. மருங்கு.

    2639:
    மருங்கோத மோதும் மணிநா கணையார்,
    மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங்கே
    எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,
    மனக்கவலை தீர்ப்பார் வரவு.

    2640:
    வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே.
    ஒருவா றொருவன் புகவாறு,-உருமாறும்
    ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,
    மாயவர்தாம் காட்டும் வழி.

    2641:
    வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே,
    தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும்
    தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள,
    வாழ்வடங்க மார்விடந்த மால்?

    2642:
    மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது
    பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால்
    பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று,
    மறப்பின்மை யான்வேண்டும் மாடு.

    2643:
    மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்
    காடானும் ஆதானும் கைகொள்ளார்,-ஊடேபோய்ப்
    போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்
    பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து.

    2644:
    பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
    ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே, பேர்ந்தெங்கும்
    தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
    இல்லைகாண் மற்றோர் இறை.

    2645:
    இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,
    மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின்
    தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்
    மீதிலகித் தாங்கிடக்கும் மீன்.

    2646:
    மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்
    வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர்
    மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான், நங்கள்
    பிணிக்காம் பெருமருந்து பின்.

    2647:
    பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,
    வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று
    திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்,
    பருச்செவியு மீர்ந்த பரன்.

    2648:
    பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,
    உரனா லொருமூன்று போதும்,-மரமேழன்
    றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர்
    கைதான் தொழாவே கலந்து?

    2649:
    கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே
    மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல்
    தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை,
    சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு.

    2650:
    சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை,
    மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட
    வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே.
    அறிகண்டாய் சொன்னேன் அது.

    2651:
    அதுவோநன் ரென்றங் கமருலகோ வேண்டில்,
    அதுவோ பொருளில்லை யன்றே?, அதுவொழிந்து
    மண்ணிறாள் வேனெனிலும் கூடும் மடநெஞ்சே,
    கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்.

    2652:
    கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்,
    புல்லென் றழிந்தனகொல் ஏபாவம்,-வெல்ல
    நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,
    அடியேன துள்ளத் தகம்.

    2653:
    அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,
    முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால்
    சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,
    ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து?

    2654:
    அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை,
    சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும்
    மாதா பிதுவாக வைத்தேன் எனதுளலே
    யாதாகில் யாதே இனி?

    2655:
    இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,
    தனிநின்ற சார்விலா மூர்த்தி,-பனிநீர்
    அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு
    முகத்தான்நின் உந்தி முதல்.

    2656:
    முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே
    முதலாகும் மூன்றுக்கும் மென்பர்-முதல்வா,
    நிகரிலகு காருருவா. நின்னகத்த தன்றே,
    புகரிலகு தாமரையின் பூ?

    2657:
    பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,
    காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்
    மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை
    எல்லாம் பிரானுருவே என்று.

    2658:
    என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்,
    ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று
    குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே.
    புடைதான் பெரிதே புவி.

    2659:
    புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென்
    செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,-அவிவின்றி
    யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,
    ஊன்பருகு நேமியாய். உள்ளு.

    2660:
    உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம்,
    விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள
    உலகளவு யானும் உளனாவன் என்கொல்,
    உலகளந்த மூர்த்தி. உரை.

    2661:
    உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,
    இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம்,
    நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்
    சொல்நன்றி யாகும் துணை.

    2662:
    துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும், சுற்றத்
    திணைநாளு மின்புடைத்தா மேலும், கணைநாணில்
    ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே,
    ஓவாத வூணாக உண்.

    2663:
    உண்ணாட்டுத் தேசன்றே. ஊழ்வினையை யஞ்சுமே,
    விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில்
    ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப்
    பேராயற் காளாம் பிறப்பு?

    2664:
    பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும்
    இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம்
    ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான்
    பாதமே யேத்தாப் பகல்?

    2665:
    பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை
    இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,--தகவாத்
    தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என் றோரார்,
    செழும்பரவை மேயார் தெரிந்து.

    2666:
    தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன், வாளா
    இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில்
    அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை
    அம்மானை யேத்தா தயர்ந்து.

    2667:
    அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன்
    உயப்போம் நெறியிதுவே கண்டாய், செயற்பால
    அல்லவே செய்கிறுதி நெஞ்சமே. அஞ்சினேன்
    மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.

    2668:
    வாழ்த்தி அவனடியைய்ப் பூப்புனைந்து, நிந்தலையைத்
    தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,
    எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,
    தங்கத்தா னாமேலும் தங்கு.

    2669:
    தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,
    எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத்
    தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய
    கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்?

    2670:
    கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,
    பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த
    சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,
    என்நினைந்து போக்குவரிப் போது?

    2671:
    இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்
    எப்போது மீதேசொல் என்னெஞ்சே--எப்போதும்
    கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்
    மெய்கழலே ஏத்த முயல்.

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்