MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 2791-3342)

    ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய
    திருவாய்மொழி

    ஸ்ரீ
    ஸ்ரீமதே ராமாநுஜாய நம

    திருவாய்மொழித் தனியன்கள்

    நாதமுனிகள் அருளிச்செய்தது
    பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
    ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
    ஸஹஸ்fரசா கோபநிஷத்ஸமாகமம்
    நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.

    வெண்பாக்கள்

    ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது
    திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
    மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
    அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
    சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.

    சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது
    மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
    இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
    ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
    பாதங்கள் யாமுடைய பற்று.

    அனந்தாழ்வான் அருளிச்செய்த்து
    ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
    வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
    சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
    பேராத வுள்ளம் பெற.

    பட்டர் அருளிச்செய்தவை
    வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
    ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
    முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
    இதத்தாய் இராமுனுசன்.

    மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
    தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
    ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
    யாழினிசை வேதத் தியல்.

    ஸ்ரீமதே ராமாநுஜாய நம
    நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி.

    திருவாய் மொழி முதற் பத்து.

    2791
    உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
    மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
    அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
    துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. (2) 1.1.1

    2792
    மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
    மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்
    இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்
    இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே. 1.1.2

    2793
    இலனது வுடையனி தெனநினை வரியவன்
    நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
    புலனொடு புலனலன், ஒழிவிலன், பரந்த அந்
    நலனுடை யொருவனை நணுகினம் நாமே. 1.1.3

    2794
    நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
    தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
    வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
    ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே. 1.1.4

    2795
    அவரவர் தமதம தறிவறி வகைவகை
    அவரவர் ரிறையவ ரெனவடி யடைவர்கள்
    அவரவர் ரிறையவர் குறைவில ரிறையவர்
    அவரவர் விதிவழி யடையநின் றனரே. 1.1.5

    2796
    நின்றனர் ரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
    நின்றிலர் ரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
    என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர்
    என்றுமொ ரியல்வொடு நின்றவெந் திடரே. 1.1.6

    2797
    திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
    படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
    உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
    சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே. 1.1.7

    2798
    சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்
    வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்
    புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து
    அரனயன் எனவுல கழித்தமைத் துளனே. 1.1.8

    2799
    உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
    உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
    உளனென விலனென விவைகுண முடைமையில்
    உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே. 1.1.9

    2800
    பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்
    பரந்தஅ ண் டமிதென நிலவிசும் பொழிவற
    கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
    கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே. 1.1.10

    2801
    கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
    வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற
    பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்
    நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே. (2) 1.1.11

    2802
    வீடுமின் முற்றவும்--வீடுசெய்து உம்முயிர்
    வீடுடை யானிடை--வீடுசெய்ம்மினே. (2) 1.2.1

    2803
    மின்னின் நிலையில--மன்னுயி ராக்கைகள்
    என்னு மிடத்து இறை--உன்னுமின் நீரே. 1.2.2

    2804
    நீர்நும தென்றிவை--வேர்முதல் மாய்த்து இறை
    சேர்மின் உயிர்க்கு அத--னேர்நிறை யில்லே. 1.2.3

    2805
    இல்லது முள்ளதும்--அல்ல தவனுரு
    எல்லையி லந்நலம்--புல்குபற் றற்றே. 1.2.4

    2806
    அற்றது பற்றெனில்--உற்றது வீடுஉயிர்
    செற்றது மன்னுறில்--அற்றிறை பற்றே. 1.2.5

    2807
    பற்றில னீசனும்--முற்றவும் நின்றனன்
    பற்றிலை யாய் அவன்--முற்றி லடங்கே. 1.2.6

    2808
    அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
    அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே. 1.2.7

    2809
    உள்ள முரைசெயல்--உள்ளவிம் மூன்றையும்
    உள்ளிக் கெடுத்து இறை--யுள்ளிலொ டுங்கே. 1.2.8

    2810
    ஒடுங்க அவன்கண்--ஒடுங்கலு மெல்லாம்
    விடும்பின்னு மாக்கை--விடும்பொழு தெண்ணே. 1.2.9

    2811
    எண்பெருக் கந்நலத்து--ஒண்பொரு ளீறில
    வண்புகழ் நாரணன்--திண்கழல் சேரே. (2) 1.2.10

    2812
    சேர்த்தடத் தென்குரு--கூர்ச்ட கோபன்சொல்
    சீர்த்தொடை யாயிரத்து--ஓர்த்தவிப் பத்தே. (2) 1.2.11

    2813
    பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய
    வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
    மத்துறு கடைவெண்ணெய் களவினில் உ ரவிடை யாப்புண்டு
    எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே. (2) 1.3.1

    2814
    எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்,
    ஒளிவரு முழுநலம் முதலில கேடில வீடாம்,
    தெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும், மிறையோன்,
    அளிவரு மருளினோ டகத்தனன், புறத்தன னமைந்தே. 1.3.2

    2815
    அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த,
    அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்,
    அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,f
    அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே? 1.3.3

    2816
    யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான்,
    யாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான்,
    பேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான்,
    பேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே. 1.3.4

    2817
    பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,
    கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,
    வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,
    உணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே. 1.3.5

    2818
    உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை,
    உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள்,
    உணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய னரனென்னுமிவரை,
    உணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே. 1.3.6

    2819
    ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற,
    நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை,
    ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து,
    நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே. 1.3.7

    2820
    நாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே
    மாளும், ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி,
    நாளூநந் திருவுடை யடிகள்தம் நலங்கழல் வணங்கி,
    மாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே. 1.3.8

    2821
    வலத்தனன் திரிபுர மெரித்தவ னிடம்பெறத் துந்தித்
    தலத்து, எழு திசைமுகன் படைத்தநல் லுலகமும் தானும்
    புலப்பட பின்னும்தன் உலகத்தி லகத்தனன் தானே
    சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே. 1.3.9

    2822
    துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்,
    மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்,
    பு<யற்கரு நிறத்தனன் பெருநிலங் கடந்தநல் லடிப்போது ,
    அயர்ப்பில னலற்றுவன் தழுவுவன் வணங்குவ னமர்ந்தே. 1.3.10

    2823
    அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,
    அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்,
    அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
    அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2) 1.3.11

    2824
    அஞ்சிறைய மடநாராய். அளியத்தாய். நீயும்நின்
    அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி
    வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்
    வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ? (2) 1.4.1

    2825
    என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்
    என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே?
    முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
    முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே? 1.4.2

    2826
    விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்.
    மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு
    மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று , ஒருத்தி
    மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே. 1.4.3

    2827
    என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத
    என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ
    நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்
    நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ? 1.4.4

    2828
    நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே,
    நல்கத்தா னாகாதொ? நாரணனைக் கண்டக்கால்
    மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.
    மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே. 1.4.5

    2829
    அருளாத நீரருளி யவராவி துவராமுன்
    அருளாழிப் புட்கடவீர் அவர்வீதி யொருநாள் என்று
    அருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி
    யருள் ஆழி வரிவண்டே. யாமுமென் பிழைத்தோமே? 1.4.6

    2830
    என்பிழைகோப் பதுபோலப் பனிவாடை யீர்கின்றது
    என்பிழையே நினைந்தருளி யருளாத திருமாலார்க்கு
    என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென் றொருவாய்ச்சொல்
    என்பிழைக்கும் இளங்கிளியே. யான்வளர்த்த நீயலையே? 1.4.7

    2831
    நீயலையே சிறுபூவாய். நெடுமாலார்க் கென்தூதாய்
    நோயெனது நுவலென்ன, நுவலாதே யிருந்தொழிந்தாய்
    சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
    வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே. 1.4.8

    2832
    நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்,
    வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று,
    வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ?
    ஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே. 1.4.9

    2833
    உடலாடிப் பிறப்புவீ டுயிர்முதலா முற்றுமாய்,
    கடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும்
    அடலாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி
    விடலாழி மடநெஞ்சே. வினையோமொன் றாமளவே. 1.4.10

    2834
    அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை
    வளவயல்சூழ் வண்குருகூர்ச்சடகோபன் வாய்ந்துரைத்த
    அளவியன்ற அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
    வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே. (2) 1.4.11

    2835
    வளவே ழுலகின் முதலாய்
    வானோ ரிறையை அருவினையேன்
    களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட
    கள்வா. என்பன், பின்னையும்,
    தளவேழ் முறுவல் பின்னைக்காய்
    வல்லா னாயர் தலைவனாய்,
    இளவே றேழும் தழுவிய
    எந்தாய். என்பன் நினைந்துநைந்தே. (2) 1.5.1

    2836
    நினைந்து நைந்துள் கரைந்துருகி,
    இமையோர் பலரும் முனிவரும்,
    புனைந்த கண்ணி நீர்சாந்தம்
    புகையோ டேந்தி வணங்கினால்,
    நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
    வித்தாய், முதலில் சிதையாமே,
    மனஞ்செய் ஞானத் துன்பெருமை
    மாசூ ணாதோ மாயோனே. 1.5.2

    2837
    மாயோ னிகளாய் நடைகற்ற
    வானோர் பலரும் முனிவரும்,
    நீயோ னிகளைப் படை என்று
    நிறைநான் முகனைப் படைத்தவன்
    சேயோ னெல்லா அறிவுக்கும்,
    திசைக ளெல்லாம் திருவடியால்
    தாயோன் எல்லா வெவ்வுயிர்க்கும்
    தாயோன் தானோ ருருவனே. 1.5.3

    2838
    தானோ ருருவே தனிவித்தாய்த்
    தன்னில் மூவர் முதலாய
    வானோர் பலரும் முனிவரும்
    மற்றும் மற்றும் முற்றுமாய்
    தானோர் பெருநீர் தன்னுள்ளே
    தோற்றி அதனுள் கண்வளரும்
    வானோர் பெருமான் மாமாயன்
    வைகுந் தன்எம் பெருமானே. 1.5.4

    2839
    மானேய் நோக்கி மடவாளை
    மார்வில் கொண்டாய். மாதவா.
    கூனே சிதைய வுண்டைவில்
    நிறத்தில் தெறித்தாய். கோவிfந்தா.
    வானார் சோதி மணிவண்ணா.
    மதுசூ தா.நீ யருளாய் உ ன்
    தேனே மலரும் திருப்பாதம்
    சேரு மாறு வினையேனே. 1.5.5

    2840
    வினையேன் வினைதீர் மருந்தானாய்.
    விண்ணோர் தலைவா. கேசவா.
    மனைசே ராயர் குலமுதலே.
    மாமா யன்னே. மாதவா.
    சினையேய் தழைய மராமரங்கள்
    ஏழும் எய்தாய். சிரீதரா.
    இனையா யினைய பெயரினாய்.
    என்று நைவன் அடியேனே. 1.5.6

    2841
    அடியேன் சிறிய ஞானத்தன்,
    அறித லார்க்கு மரியானை
    கடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி
    புனைந்தான் தன்னைக் கண்ணனை
    செடியார் ஆக்கை யடியாரைச்
    சேர்தல் தீர்க்கும் திருமாலை
    அடியேன் காண்பான் அலற்றுவன்,
    இதனில் மிக்கோர் அயர்வுண்டே? 1.5.7

    2842
    உண்டா யுலகேழ் முன்னமே,
    உமிழ்ந்து மாயை யால்புக்கு
    உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்
    உவலை யாக்கை நிலையெய்தி
    மண்டான் சோர்ந்த துண்டேலும்
    மனிசர்க் காகும் பீர் சிறிதும்
    அண்டா வண்ணம் மண்கரைய
    நெய்யூண் மருந்தோ? மாயோனே. 1.5.8

    2843
    மாயோம் தீய அலவலைப்
    பெருமா வஞ்சப் பேய்வீய
    தூய குழவி யாய்விடப்பால்
    அமுதா அமுது செய்திட்ட
    மாயன் வானோர் தனித்தலைவன்
    மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும்
    தாயோன் தம்மா னென்னம்மான்
    அம்மா மூர்த்தி யைச்சார்ந்தே. 1.5.9

    2844
    சார்ந்த இருவல் வினைகளும்
    சரித்து மாயப் பற்றறுத்து
    தீர்ந்து தன்பால் மனம்வைக்கத்
    திருத்தி வீடு திருத்துவான்,
    ஆர்ந்த ஞானச் சுடராகி
    அகலம் கீழ்மேல் அளவிறந்து,
    நேர்ந்த வுருவாய் அருவாகும்
    இவற்றி னுயிராம் நெடுமாலே. 1.5.10

    2845
    மாலே. மாயப் பெருமானே.
    மாமா யனே. என்றென்று
    மாலே யேறி மாலருளால்
    மன்னு குருகூர்ச் சடகோபன்
    பாலேய் தமிழ ரிசைகாரர்
    பத்தர் பரவும் ஆயிரத்தின்
    பாலே பட்ட இவைபத்தும்
    வல்லார்க் கில்லை பரிவதே. 1.5.11

    2846
    பரிவதி லீசனைப் பாடி
    விரிவது மேவ லுறுவீர்.
    பிரிவகை யின்றிநன் னீர்தூய்
    புரிவது வும்புகை பூவே. (2) 1.6.1

    2847
    மதுவார் தண்ணந் துழாயான்
    முதுவே தமுதல் வனுக்கு
    எதுவே தென்பணி என்னா
    ததுவே யாட்செய்யு மீடே. 1.6.2

    2848
    ஈடு மெடுப்புமி லீசன்
    மாடு விடாதென் மனனே
    பாடுமென் நாவலன் பாடல்
    ஆடுமெ னங்கம ணங்கே. 1.6.3

    2849
    அணங்கென ஆடுமெ னங்கம்
    வணங்கி வழிபடு மீசன்
    பிணங்கி யமரர் பிதற்றும்
    குணங்கெழு கொள்கையி னானே. 1.6.4

    2850
    கொள்கைகொ ளாமையி லாதான்
    எள்கலி ராகமி லாதான்
    விள்கைவிள் ளாமைவி ரும்பி
    உள்கலந் தார்க்கோ ரமுதே. 1.6.5

    2851
    அமுதம் அமரகட் கீந்த
    நிமிர்சுட ராழி நெடுமால்
    அமுதிலு மாற்ற இனியன்
    நிமிர்திரை நீள்கட லானே. 1.6.6

    2852
    நீள்கடல் சூழிலங் கைக்கோன்
    தோள்கள் தலைதுணி செய்தான்
    தாள்கள் தலையில் வணங்கி
    நாள்கள் தலைக்க ழிமினே. 1.6.7

    2853
    கழிமின்தொண் டீர்கள் கழித்துத்
    தொழுமின் அவனைத் தொழுதால்
    வழிநின்ற வல்வினை மாள்வித்து
    அழிவின்றி யாக்கம் தருமே. 1.6.8

    2854
    தரும அரும்பய னாய
    திருமக ளார்தனிக் கேள்வர்,
    பெருமை யுடைய பிரானார்,
    இருமை வினைகடி வாரே. 1.6.9

    2855
    கடிவார் தீய வினைகள்
    நொடியா ருமள வைக்கண்
    கொடியா அடுபுள் ளுயர்த்த
    வடிவார் மாதவ னாரே. 1.6.10

    2856
    மாதவன் பால்சட கோபன்
    தீதவ மின்றி யுரைத்த
    ஏதமி லாயிரத் திப்பத்து
    ஓதவல் லார்பிற வாரே. 1.6.11

    2857
    பிறவித்துயரற ஞானத்துள்நின்று,
    துறவிச்சுடர்விளக்கம் தலைப்பெய்வார்,
    அறவனை யாழிப் படையந fதணனை,
    மறவியை யின்றி மனத்துவைப் பாரே. 1.7.1

    2858
    வைப்பாம்மருந்தா மடியரை, வல்வினைத்
    துப்பாம் புலனைந்தும் துஞ்சக கொடானவன்,
    எப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து,
    அப்பால வனெங்க ளாயர் கொழுந்தே. 1.7.2

    2859
    ஆயர் கொழுந்தா யவரால் புடையுண்ணும்,
    மாயப் பிரானையென் மாணிக்கச் சோதியை,
    தூய அமுதைப் பருகிப்பருகி, என்
    மாயப் பிறவி மயர்வறுத் தேனே. 1.7.3

    2860
    மயர்வறவென்மனத்தே மன்னினான் றன்னை,
    உயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை,
    அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை, என்
    இசைவினையென்சொல்லி யான்விடுவேனே. 1.7.4

    2861
    விடுவேனோவென் விளக்கைஎன்னாவியை,
    நடுவேவந்துய்யக் கொள்கின்றநாதனை,
    தொடுவேசெய்திள ஆய்ச்சியர்க்கண்ணினுள்,
    விடவேசெய்து விழிக்கும்பிரானையே. 1.7.5

    2862
    பிரான்பெருநிலங் கீண்டவன், பின்னும்
    விராய்மலர்த்துழாய் வேய்ந்தமுடியன்,
    மராமரமெய்த மாயவன், என்னுள்
    இரானெனில்பின்னை யானொட்டுவேனோ. 1.7.6

    2863
    யானொட்டியென்னுள் இருத்துவ மென்றிலன்,
    தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து,
    ஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து, இயல்
    வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே. 1.7.7

    2864
    என்னை நெகிழ்க்கிலும் என்னுடைf நன்னெஞ்சந்
    தன்னை, அகல்விக்கத் தானும்கில்லானினி,
    பின்னை நெடும்பணைத் தோள்மகிழ fபீடுடை,
    முன்னை யமரர் முழுமுத லானே. 1.7.8

    2865
    அமரர fமுழுமுத லாகிய ஆதியை,
    அமரர்க் கமுதீந்த ஆயர் கொழுந்தை,
    அமர அழும்பத் துழாவியென் னாவி,
    அமரர்த் தழுவிற் றினிய கலுமோ. 1.7.9

    2866
    அகலில் அகலும் அணுகில் அணுகும்,
    புகலு மரியன் பொருவல்ல னெம்மான்,
    நிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம்,
    பகலு மிரவும் படிந்து குடைந்தே. 1.7.10

    2867
    குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை,
    அடைந்த தென் குருகூர்ச்சட கோபன்,
    மிடைந்த சொல் தொடை யாயிரத்திப்பத்து,
    உடைந்து நோய்களை யோடு விக்குமே. 1.7.11

    2868
    ஓடும்புள்ளேரி, சூடும fதண்டுழாய்,
    நீடு நின்றவை, ஆடும் அம்மானே. 1.8.1

    2869
    அம்மானாய்ப் பின்னும், எம்மாண fபுமானான,
    வெம்மா வாய்கீண்ட, செம்மா கண்ணனே. 1.8.2

    2870
    கண்ணா வானென்றும், மண்ணோர்விண்ணோர்க்கு,
    தண்ணார் வேங்கட, விண்ணோர fவெற்பனே. 1.8.3

    2871
    வெற்பை யொன்றெடுத்து, ஒற்க மின்றியே,
    நிற்கும் அம்மான்சீர், கற்பன் வைகலே. 1.8.4

    2872
    வைக லும்வெண்ணெய், கைக லந்துண்டான்,
    பொய்க லவாது, என் - மெய்க லந்தானே. 1.8.5

    2873
    கலந்தென்னாவி, நலங்கொள் நாதன்,
    புலங்கொள் மாணாய், நிலம்கொண் டானே. 1.8.6

    2874
    கொண்டா னேழ்விடை, உண்டா னேழ்வையம்,
    தண்டா மஞ்செய்து, என் - எண்டா னானானே. 1.8.7

    2875
    ஆனா னானாயன், மீனோ டேனமும்,
    தானா னானென்னில், தானா யசங்கே. 1.8.8

    2876
    சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்,
    எங்கும் தானாய, நங்கள் நாதனே. 1.8.9

    2877
    நாதன்ஞாலங்கொள் - பாதன், என்னம்மான்,
    ஓதம் போல்கிளர், வேதநீரனே. 1.8.10

    2878
    நீர்புரை வண்ணன், சீர்ச்சடகோபன்,
    நெர்த லாயிரத்து, ஓர்தலிவையே. 1.8.11

    2879
    இவையும் அவையும் உவையம் இவரும் அவரும் உவரும்,
    அவையும fயவரும்தன் னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்,
    அவையுள் தனிமுத லெம்மான் கண்ணபிரானென்னமுதம்,
    சுவையன் திருவின் மணாளன் என்னுடைச்சுழலு ளானே. 1.9.1

    2880
    சூழல fபலபல வல்லான் தொல்லையங் காலத் துலகை
    கேழலொன் றாகியி டந்த கேசவ னென்னுடை யம்மான்,
    வேழ மருப்பையொ சித்தான் விண்ணவர்க் கெண்ணல் அரியான்
    ஆழ நெடுங்கடல fசேர்ந்தான் அவனென fனருகலி லானே. 1.9.2

    2881
    அருகலி லாய பெருஞ்சர் அமரர்கள் ஆதி முதல்வன்,
    கருகிய நீலநன் மேனி வண்ணன்செந fதாமரைக் கண்ணன்,
    பொருசிறைப்புள்ளுவந்தேறும் பூமகளார்தனிக்கேள்வன்,
    ஒருகதியின்சுவைதந்திட் டொழிவிலனென்னோடுடனே. 1.9.3

    2882
    உடனமர்க்காதல்மகளிர் திருமகள்மண்மகள் ஆயர்
    மடமகள், என்றிவர்மூவர் ஆளும் உலகமும்மூன்றே,
    உடனவையொக்கவிழுங்கி ஆலிலைச்சேர்ந்தவனெம்மான்,
    கடல்மலிமாயப்பெருமான் கண்ணனென் ஒக்கலை யானே. 1.9.4

    2883
    ஒக்கலைவைத்துமுலைப்பால் உண்ணென்றுதந்திடவாங்கி,
    செக்கஞ்செகவன்றவள்பால் உயிர்செகவுண்டபெருமான்,
    நக்கபிரானோடயனும் இந்திரனும்முதலாக,
    ஒக்கவும்தோற்றிய ஈசன் மாயனென்னெஞ்சினுளானே. 1.9.5

    2884
    மாயனென்னெஞ்சினுள்ளன் மற்றும்யவர்க்கும் அதுவே,
    காயமும்சீவனும்தானே காலுமெரியும் அவனே,
    சேயன் அணியன்யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன்,
    தூயன் துயக்கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே. 1.9.6

    2885
    தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும்,
    தாளிணைமேலும்புனைந்த தண்ணந்துழாயுடையம்மான்
    கேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி,
    நாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே. 1.9.7

    2886
    நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம்,
    ஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே,
    பூவியல்நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும்,
    காவிநன்மேனிக்கமலக் கண்ணனென்கண்ணினுளானே. 1.9.8

    2887
    கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான்காண்பன் அவன்கண்களாலே,
    அமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி,
    கமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும்தோற்றி
    அமலத்தெய்வத்தோடுலகம் ஆக்கியென்நெற்றியுளானே. 1.9.9

    2888
    நெற்றியுள்நின்றென்னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி,
    கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத்தொழுவார்,
    ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,
    மற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே. 1.9.10

    2889
    உச்சியுள்ளேநிற்கும்தேவ தேவற்குக்கண்ணபிராற்கு,
    இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன்,
    இச்சொன்ன ஆயிரத்துள் இவையுமோர்பத்தெம்பிராற்கு,
    நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னிபொருமே. 1.9.11

    2890
    பொருமாநீள்படை யாழிசங்கத்தொடு,
    திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ,
    ஒருமாணிக்குற ளாகிநிமிர்ந்த, அக்
    கருமாணிக்கமென் கண்ணுளதாகுமே. 1.10.1

    2891
    கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில்,
    எண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம்,
    மண்ணும்நீரு மெரியும்நல்வாயுவும்,
    விண்ணுமாய்விரியு மெம்பிரானையே. 1.10.2

    2892
    எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும்
    தம்பிரானை, தண்தாமரைக்கண்ணனை,
    கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை,
    எம்பிரானைத் தொழாய்மடநெஞ்சமே. 1.10.3

    2893
    நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால்
    என்செய்யோம், இனியென்னகுறைவினம்?
    மைந்தனை மலராள்மணவாளனை,
    துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய். 1.10.4

    2894
    கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கின்று, ஓர்
    எண்டானுமின்றியே வந்தியலுமாறு,
    உண்டானையுலகேழு மோர்மூவடி
    கொண்டானை, கண்டு கொண்டனைநீயுமே. 1.10.5

    2895
    நீயும்நானுமிந் நேர்நிற்கில், மேல்மற்றோர்,
    நோயும்சார்க்கொடான் நெஞ்சமே, சொன்னேன்,
    தாயும்தந்தையுமா யிவ்வுலகினில்,
    வாயுமீசன் மணிவண்ணனெந்தையே. 1.10.6

    2896
    எந்தையேயென்று மெம்பெருமானென்றும்,
    சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன்,
    எந்தையெம்பெருமானென்று வானவர்,
    சிந்தையுள் வைத்துச் சொல்லும்செல்வனையே. 1.10.7

    2897
    செல்வநாரண னென்றசொல்கேட்டலும்,
    மல்கும்கண்பனி நாடுவன்மாயமே,
    அல்லும்நன்பகலு மிடைவீடின்றி,
    நல்கியென்னை விடான்நம்பி நம்பியே. 1.10.8

    2898
    நம்பியைத்தென் குறுங்குடிநின்ற, அச்
    செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை,
    உம்பர்வானவ ராதியஞ்சோதியை,
    எம்பிரானையென் சொல்லிமறப்பனோ. 1.10.9

    2899
    மறப்பும்ஞானமும் நானொன் றுணர்ந்திலன்,
    மறக்குமென்றுசெந் தாமரைக்கண்ணொடு,
    மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை,
    மறப்பனோவினி யானென்மணியையே? 1.10.10

    2900
    மணியைவானவர் கண்ணனைத்தன்னதோர்
    அணியை, தென்குரு கூர்ச்சடகோபன், சொல்
    பணிசெயாயிரத் துள்ளிவைபத்துடன்,
    தணிவிலர் கற்ப ரேல்கல்விவாயுமே. 1.10.11