MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    3.1 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிச் செய்த
    திருக்கோயில் திருவெண்பா (க்ஷேத்திரத் திருவெண்பா) (பாசுரங்கள் 145- 168)
    145. ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
    கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று -நாடுகின்ற
    நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
    தில்லைச்சிற் றம்பலமே சேர். 1
    146 கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
    நடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்த
    பாழ்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
    கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட. 2
    147 குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
    நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
    ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
    ஐயாறு வாயால் அழை. 3
    148. காளை வடிவொழிந்து கையுறவோ டையுறவாய்
    நாளும் அணுகி நலியாமுன் - பாளை
    அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆருரற் காளாய்க்
    கவிழ்கமுகம் கூம்புகஎன் கை. 4
    149 வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
    குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சி
    அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
    திருத்துருத்தி யான்பாதஞ் சேர். 5
    150 காலைக் கலையிழையாற் கட்டித்தன் கையார்த்து
    மாலை தலைக்கணிந்து மையெழுதி - மேலோர்
    பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்
    திருக்கோடி காஅடைநீ சென்று. 6
    151. மாண்டுவாய் அங்காவா முன்னம் மடநெஞ்சே
    வேண்டுவாய் ஆகி விரைந்தொல்லைப் - பாண்டவாய்த்
    தென்னிடைவாய் மேய சிவனார் திருநாமம்
    நின்னிடைவாய் வைத்து நினை. 7
    152. தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
    பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
    எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
    நெடுங்களத்தான் பாதம் நினை. 8
    153 அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி
    ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு
    கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பால்
    குழித்தண் டலையானைக் கூறு. 9
    154 படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
    முடியரசர் செல்வத்து மும்மைக் - கடியிலங்கு
    தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்
    டோடேந்தி உண்ப துறும். 10
    155 குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட
    வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாம் - தழீஇயிருந்தும்
    என்னானைக் காவா இதுதகா தென்னாமுன்
    தென்னானைக்கா அடைநீ சென்று. 11
    156 குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
    பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத்
    திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
    இருப்பின்னை யங்காந் திளைத்து. 12
    157. காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும்
    பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள்
    ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை
    மாகாளங் கைதொழுது வாழ்த்து. 13
    158. இல்லும் பொருளும் இருந்த மனையளவே
    சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
    கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே
    வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து. 14
    159 அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
    குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - நெஞ்சமே
    போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
    சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து. 15
    160. இட்ட குடிநீர் இருநாழி ஓருழக்காச்
    சட்டஒரு முட்டைநெய் தான்கலந் - தட்ட
    அருவாச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில்
    திருவாச்சி ராமமே சேர். 16
    161 கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி
    ஒழிந்த துடல்இரா வண்ணம் - அழிந்த
    திராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே
    சிராமலையான் பாதமே சேர். 17
    162 இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
    விழவாடி ஆவிவிடா முன்னம் - மழபாடி
    ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
    நீண்டானை நெஞ்சே நினை. 18
    163 உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
    கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - கொள்ளிடத்தின்
    தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்
    தன்திருவாய்ப் பாடியான் தாள். 19
    164. என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
    கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் - வன்னெஞ்சேய்
    மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி
    ஏகம்பத் தானை இறைஞ்சு. 20
    165 கரம்ஊன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர்
    மரம்ஊன்றி வாய்குதட்டா முன்னம் - புரம்மூன்றுந்
    தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய
    ஈச்சரத்தான் பாதமே ஏத்து. 21
    166. தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்
    டெஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சங்
    கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
    இரந்துண் டிருக்கப் பெறின். 22
    167 நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்
    வீற்றிருந்த செல்வம் விழையாதே - கூற்றுதைத்தான்
    ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன்
    பாடரவங் கேட்ட பகல். 23
    168. உய்யும் மருந்திதனை உண்மின் எனஉற்றார்
    கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய
    எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
    செழுந்திரும யானமே சேர். 24

    திருச்சிற்றம்பலம்