MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    5.8 நக்கீர தேவ நாயனார் அருளிச் செய்த
    போற்றித் திருக்கலிவெண்பா
    500. திருத்தங்கு மார்பில் திருமால் வரைபோல்
    எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் - பருத்த
    குறுத்தாள் நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல
    நிறத்தாற் பொலிந்து நிலமேழ் - உறத்தாழ்ந்து
    பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள்
    நின்றவா நின்ற நிலைபோற்றி - அன்றியும்
    புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய்
    அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் - பண்டொருநாள்
    காணான் இழியக் கனக முடிகவித்துக்
    கோணாது நின்ற குறிபோற்றி - நாணாளும்
    (5)
    பேணிக்கா லங்கள் பிரியாமை பூசித்த
    மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் - காண
    வரத்திற் பெரிய வலிதொலைத்த காலன்
    உரத்தில் உதைத்தஉதை போற்றி - கரத்தாமே
    வெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின்
    கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் - பொற்புடைய
    வாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக்
    காமன் அழகழித்த கண்போற்றி - தூமப்
    படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி
    விடமெடுத்த வேகத்தால் மிக்குச் - சடலம்
    (10)
    முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை
    அடங்க மிதித்தஅடி போற்றி - நடுங்கத்
    திருமால் முதலாய தேவா சுரர்கள்
    கருமால் கடல்நாகம் பற்றிக் - குருமாற
    நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த
    ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி - சாலமண்டிப்
    போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும்
    தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் - வீரம்
    கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர
    எடுத்த நடத்தியல்பு போற்றி - தடுத்து
    (15)
    வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம்
    நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப் - புரையெடுத்த
    பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய
    மெத்தனவே வைத்த விரல்போற்றி - அத்தகைத்த
    வானவர்கள் தாங்கூடி மந்திரித்த மந்திரத்தை
    மேனவில ஓடி விதிர்விதிர்த்துத் - தானவருக்
    கொட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை
    வெட்டிச் சிரித்த விறல்போற்றி - மட்டித்து
    வாலுகத்தால் நல்லிலிங்க மாவகுத்து மற்றதன்மேல்
    பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுதைத்தங்
    (20)
    கோட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை
    வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கண்
    பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும்
    நற்கோலம் ஈந்த நலம்போற்றி - நிற்க
    வலந்தருமால் நான்முகனும் வானவரும் கூடி
    அலந்தருமால் கொள்ள அடர்க்கும் - சலந்தரனைச்
    சக்கரத்தால் ஈர்ந்தரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
    மிக்கஅஃ தீந்த விறல்போற்றி - அக்கணமே
    நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம்
    தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய - மிக்கிருந்த
    (25)
    அங்கைத் தலத்தே அணிமானை ஆங்கணிந்த
    செங்கைத் திறத்த திறல்போற்றி - திங்களைத்
    தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேல் சேர்வித்து
    வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் - பாய்த்திப்
    பிரமன் குறையிரப்பப் பின்னும் அவர்க்கு
    வரமன் றளித்தவலி போற்றி - புரமெரித்த
    அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து
    நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து - நன்று
    நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில்
    கடைகாவல் கொண்டவா போற்றி - விடைகாவல்
    (30)
    தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல்
    வானவர்கள் வேண்ட மயிலூரும் - கோனவனைக்
    சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து
    வானாள வைத்த வரம்போற்றி - மேனாள்
    அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக்
    கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் -துதித்தங்
    கவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ்
    பவமறுத்த பாவனைகள் போற்றி - கவைமுகத்த
    பொற்பா கரைப்பிளந்து கூறிரண்டாப் போகட்டும்
    எற்பா சறைப்போக மேல்விலகி- நிற்பால
    (35)
    மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண்
    வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி - விம்மி
    அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக
    எடுத்துரித்துப் போர்த்த இறைபோற்றி - தொடுத்தமைத்த
    நாண்மாலை கொண்டணிந்த நால்வர்க் கன் றால்நிழற்கீழ்
    வாண்மாலை ஆகும் வகையருளித் - தோள்மாலை
    விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம்
    எட்டிலங்க வைத்த இறைபோற்றி - ஒட்டி
    விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி
    அசைய உடல்திரியா நின்று - வசையினால்
    (40)
    பேசு பதப்பாற் பிழைபொறுத்து மற்றவற்குப்
    பாசுபதம் ஈந்த பதம்போற்றி - நேசத்தால்
    வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந்திறைச்சி
    ஆயசீர் போனகமா அங்கமைத்து - தூயசீர்க்
    கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து
    விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி - மண்ணின்மேல்
    காளத்தி போற்றி கயிலைமலை போற்றிஎன
    நீளத்தி னால்நினைந்து நிற்பார்கள் - தாளத்தோ
    டெத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப
    அத்தனடி சேர்வார்கள் ஆங்கு. (45)

    திருச்சிற்றம்பலம்