தீறூ வாகூப்பூ -
1. சீர்ப்பாத வகுப்பு
காவடிச்சிந்து - கண்ட சாபு (21/2)
உததியிடை கடவு மரகத வருண குல துரக
உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயமென அதிகவித கலப கக மயிலின் மிசை
யுகமுடிவின் இருளகல ஒருஜோதி வீசுவதும்
உடலும் உடல் உயிரு நிலை பெறுதல் பொருளென உலகம்
ஒருவிவரு மனுபவன சிவயோக சாதனையில்
ஒழுகும் அவர் பிறிது பரவசம் அழிய விழி செருகி
உணர்வு விழி கொடு நியதி தமதூடு நாடுவதும்
உரு எனவும் அரு எனவும் உளதெனவும் இலதெனவும்
உழலுவன பரசமய கலை ஆரவாரம் அற
உரை அவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ
உளபடியை உணருமவர் அனுபூதி ஆனதுவும்
உறவுமுறை மனைவிமக எனும் அலையில் எனதிதய
உருவுடைய மலினபவ ஜலராசி ஏறவிடும்
உறுபுணையும் அறிமுகமும் உயரமரர் மணிமுடியில்
உறைவதுவும் உலைவிலதும் அடியேன் மனோரதமும்
இதழி வெகு முக ககன நதி அறுகு தறுகண் அர
இமகிரண தருண உடு பதி சேர் ஜடாமவுலி
இறைமகிழ உடைமணியொட் அணிசகலமணி கலென
இமையமயில் தழுவும் ஒரு திருமார்பில் ஆடுவதும்
இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயிற்
எறிபுகுத உரகர்ப்பதி அபிஷேகம் ஆயிரமும்
எழுபிலமு நெறு நெறென முறிய வடகுவட் இடிய
இளைய தளர் நடை பழகி விளையாடல் கூருவதும்
இனியகனி கடலைபயற் ஒடியல்பொரி அமுது செயும்
இலகுவெகு கடவிகட தடபார மேருவுடன்
இகலி முது திகிரிகிரி நெரிய வளை கடல் கதற
எழு புவியை ஒரு நொடியில் வலமாக ஓடுவதும்
எறுழி புலி கரடி அரி கரி கடமை வருடை உழை
இரலை மரை இரவு பகல் இரைதேர் கடாடவியில்
எயினர் இடும் இதண் அதனில் இளகு தினை கிளி கடிய
இனிது பயில் சிறுமி வளர் புனமீத் உலாவுவதும்
முதல வினை முடிவில் இருபிறை எயிறு கயிறுகொடு
முது வடவை விழி சுழல வருகால தூதர்க்கெட
முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையும் அவை
முடிய வருவதும் அடியர் பகை கோடி சாடுவதும்
மொகுமொகென மதுப முரல் குரவு விளவினது குறு
முறியு மலர் வகுள தள முழுனீல தீவரமும்
முருகு கமழ்வதும் அகில முதன்மை தருவதும் வ்ரத
முனிவர் கருதரிய தவ முயல்வார் தபோ பலமும்
முருக சரவண மகளிர் அறுவர் முலை ஞுகரும் அறு
முக குமர சரணமென அருள்பாடி ஆடிமிக
மொழி குழற அமுது தொழுதுர் உகுமவர் விழி அருவி
முழுகுவதும் வருகவென அறைகூவி ஆளுவதும்
முடிய வழி வழி அடிமை எனும் உரிமை அடிமை முழு
துலக் அறிய மழலை மொழி கொடு பாடும் ஆசுகவி
முதல மொழிவன நிபுண மதுப முகர் இத மவுன
முகுள பரிமள நிகில கவிமாலை சூடுவதும்
மதசிகரி கதறி முது முதலை கவர்த்தர நெடிய
மடு நடுவில் வெருவி ஒரு விசை ஆதிமுலம் என
வருகருணை வரதன் இகல் இரணியனை ஞுதி உகிரின்
வகிரும் அடல் அரி வடிவு குறளாகி மா பலியை
வலிய சிறை இட வெளியின் முகடு கிழிபட முடிய
வளரு முகில் நிருதன் இரு பது வாகு பூதரமும்
மகுடம் ஒருபது முறிய அடு பகழி விடு குரிசில்
மருக நிசிசரர் தளமும் வரு தாரகா சுரனும்
மடிய மலை பிளவு பட மகர ஜலனிதி குறுகி
மறுகி முறையிட முனியும் வடிவேல நீலகிரி
மருவு குருபதி யுவதி பவதி பகவதி மதுர
வசனி பயிரவி கவுரி உமையாள் த்ரிசூல தரி
வனஜை மதுபதி அமலை விஜயை திரிபுரை புனிதை
வனிதை அபினவை அனகை அபிராம நாயகி தன்
மதலை மலை கிழவன் அனுபவன் அபயன் உபய சதுர்
மறையின் முதல் நடு முடிவின் மணனாறு சீறடியே
---.
2. தேவேந்திர சங்க வகுப்பு
புன்னாக வராளி - சங்கீர்ண ருபகம் - (2 களை) (22)
தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக ஞுதிகொடு
சாடோ ங்கு நெடுன் கிரி ஓடேந்து பயங்கரி
தமருக பரிபுர ஒலிகொடு நடனவில் சரணிய சதுர் மறை
தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை
சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித
தாம் ஆங்குச மென் திரு தாளாந்தர அம்பிகை
தரு பதி சுரரொடு சருவிய அசுரர்கள் தட மணிமுடி பொடி
தான் ஆம்படி செங்கையில் வாள் வாங்கிய சங்கரி
இரண கிரண மட மயில் ம்ருகமத புளகித இளமுலை இள
நீர் தாங்கி ஞுடங்கிய ஞூல்போன்ற மருங்கினள்
இறுகிய சிறு பிறை எயிருடை யமபடர் எனதுயிர் கொள வரின்
யான் ஏங்குதல் கண்டெதிர் தான் ஏன்று கொளும் குயில்
இடுபலி கொடு திரி இரவலர் இடர் கெடவிடு மன கரதல
ஏகாம்பரை இந்திரை மொகாங்க சுமங்கலை
எழுதிய படமென இருள் அறு சுடரடி இணை தொழு மவுனிகள்
ஏகாந்த சுகம் தரு பாசாங்குச சுந்தரி
கரணமு மரணமு மலமொடும் உடல்படு கடுவினை கெடனினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்ஜனி நஞ்சுமிழ்
கனல் எரி கணபண குணமணி அணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம் படி கொண்டவள்
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரி கமலை குழை
காதார்ந்த செழுங்க் கழுனீர் தோய்ந்த பெருன் திரு
கரைபொழி திருமுக கருணையில் உலகெழு கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மா சாம்பவி தந்தவன்
அரணெடு வடவரை அடியொடு பொடிபட அலைகடல் கெட அயில்
வேல் வாங்கிய செந்தமிழ் ஞூலோன் குமரன் குகன்
அறுமுகன் ஒருபதொட் இருபுயன் அபினவன் அழகிய குறமகள்
தார்வேய்ந்த புயன் பகையா மாந்தர்கள் அந்தகன்
அடன்மிகு கடதட விகடித மதகளிற் அனவரதமும்
அகலா மாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம் படி செந்திலில்
அதிபதி என வரு பொரு திரல் முருகனை அருள்பட மொழிபவர்
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே.
---.
3. வேல் வகுப்பு
மோகனம் - ஆதி (திச்ர நடை) (எடுப்பு அதீதம்
பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை
கறுத்த குழல் சிவத்த இதழ் மறச் சிறுமி விழிக்கு நிகராகும்
பனைக் கை முக படக் கரட மதத் தவள
கஜக் கடவுள் பதத்திடு நிகளத்து முளை தெறிக்க அரமாகும்
பழுத்த முது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு
கவிப் புலவன் இசைக் குருகி வரைக் குகையை இடித்து வழிகாணும்
பசித் அலகை முசித் அழுது முறைப் படுதல்
ஒழித் அவுணர் உரத் உதிர நிணத் தசைகள் புசிக்க அருள் நேரும்
சுரர்க்கு முனி வரர்க்கு மக பதிக்கும் விதி
தனக்கும் அரி தனக்கும் நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினை சாடும்
சுடர்ப் பரிதி ஒளிப்ப நில ஒழுக்கு மதி
ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர் ஒளிப் பிரபை வீசும்
துதிக்கும் அடியவர்க் கொருவர் கெடுக்க இடர்
நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும் எனக்கொர் துணை ஆகும்
சொலற்கரிய திருப் புகழை உரைத் அவரை
அடுத்த பகை அறுத் எறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும்
தருக்கி நமன் முருக்க வரின் எருக்கு மதி
தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை கழற்கு நிகராகும்
தலத்தில் உள கணத் தொகுதி களிப்பின் உண
அழைப் பதென மலர்க் கமல கரத்தின் முனை விதிர்க்க வளைவாகும்
தனித்து வழி நடக்குமெனத் இடத்தும் ஒரு
வலத்தும் இரு புறத்தும் அருகடுத் இரவு பகற்றுணைய தாகும்
சலத்து வரும் அரக்கருடல் கொழுத்து வளர்
பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில் விருப்ப மொடு சூடும்
திரைக் கடலை உடைத்து நிறை புனற் கடிது
குடித் உடையும் உடைப் படைய அடைத் உதிர நிறைத்து விளையாடும்
திசைக் கிரியை முதற் குலிசன் அறுத்த சிறை
முளைத்த தென முகட்டின் இடை பறக்க அற விசைத் அதிர ஓடும்
சினத் அவுணர் எதிர்த்த ரண களத்தில் வெகு
குறைத் தலைகள் சிரித் எயிரு கடித்து விழி விழித் அலற மோதும்
திருத்தணியில் உதித் அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனத் உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே
(எனத் உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே)
---.
4. திருவேளைக்காரன் வகுப்பு
நாதனாமக்ரிய - கண்ட சாபு (21/2)
ஆனபய பத்தி வழி பாடு பெறு முத்தி அது
வாக நிகழ் பத்த ஜன வாரக் காரனும்
ஆர மதுரித்த கனி காரண முதல் தமைய
நாருடன் உணக் கை பரி தீமைக் காரனும்
ஆகமம் விளைத் அகில லோகமு நொடிப் பளவில்
ஆசையொடு சுற்றும் அதி வேகக் காரனும்
ஆணவ அழுக் கடையும் ஆவியை விளக்கி அனு
பூதி அடைவித்த தொரு பார்வைக் காரனும்
ஆடலைவுபட்ட் அமரர் நாடது பிழைக்க அம
ராவதி புரக்கும் அடல் ஆண்மைக் காரனும்
ஆடக விசித்ர கன கோபுர முகப்பில் அரு
ணாபுரியில் நிற்கும் அடையாளக் காரனும்
ஆயிர முகத்து நதி பாலனு மகத் அடிமை
ஆனவர் தொடுத்த கவி மாலைக் காரனும்
ஆறுமுக வித்தகனும் ஆறிருபுயத் அரசும்
ஆதி முடிவற்ற திரு நாமக் காரனும்
யானென தென சருவும் ஈன சமயத் எவரும்
யாரும் உணதற் கரிய நேர்மைக் காரனும்
யாது நிலை அற்றலையும் ஏழு பிறவிக் கடலை
ஏறவிடு நற்கருணை ஓடக் காரனும்
ஏரகம் இடைக்கழி சிராமலை திருப் பழனி
ஏரணி செருத் தணியில் வாசக் காரனும்
ஏழையின் இரட்டை வினை ஆயதொருடர் சிறை
இராமல் விடுவித்த் அருள் நியாயக் காரனும்
யாமளை மணக்கு முக சாமளை மணிக் குயிலை
யாயென அழைத் உருகு நேயக் காரனும்
ஏதம் அற நிச்சய மனோலய விளக்கொளியும்
யாக முனிவர்க் குரிய காவற் காரனும்
ஈரிரு மருப் புடைய சோனை மத வெற்பி வரும்
யானை அளவில் துவளும் ஆசைக் காரனும்
ஏடவிழ் கடப்ப மலர் கூதள முடிக்கும் இளை
யோனும் அறிவிற் பெரிய மேன்மைக் காரனும்
வானவர் பொருட்டு மகவானது பொருட்டு மலர்
வாவியில் உதித்த முக மாயக் காரனும்
வாரண பதிக் குதவு நாரணன் உவக்கு மரு
மானும் அயனைக் கறுவு கோபக் காரனும்
வாழி என நித்த மறவாது பரவிற் சரண
வாரிஜம் அளிக்கும் உப காரக் காரனும்
மாடமதில் சுற்றிய த்ரிகூட கிரியிற் கதிர் செய்
மா நகரியிற் கடவுள் ஆயக் காரனும்
வாள் எயிறதுற்ற பகுவாய் தொறு நெருப் உமிழும்
வாசுகி எடுத் உதறும் வாசிக் காரனும்
மாசில் உயிருக் உயிரும் ஆசில் உணர்வுக் உணர்வும்
வானில் அணுவுக் அணு உபாயக் காரனும்
வாதனை தவிர்த்த குரு நாதனும் வெளிப்பட ம
காடவியில் நிற்ப தோர் சகாயக் காரனும்
மீனவனு மிக்க்க புலவோரும் உறை பொற் பலகை
மீதமர் தமிழ் த்ரய வினோதக் காரனும்
வேரி மதுமத்த மதி தாதகி கடுக்கை புனை
வேணியர் துதிப்ப தொரு கேள்விக் காரனும்
வேலை துகள் பட்டு மலை சூரன் உடல் பட்டுருவ
வேலை உறவிட்ட தனி வேலைக் காரனும்
மீனுலவு கிர்த்திகைக் குமாரனு நினைக்கும் அவர்
வீடு பெறவைத் அருள் உதாரக் காரனும்
மேனை அரிவைக் குரிய பேரனு மதித்த திறல்
வீரனும் அரக்கர் குல சூறைக் காரனும்
வேதியர் வெறுக்கையும் அனாதி பர வச்துவும் வி
சாகனும் விகற்ப வெகு ருபக் காரனும்
வேடுவர் புனத்தில் உரு மாறி முனி சொற்படி வி
யாகுல மனத்தினொடு போம்விற் காரனும்
மேவிய புனத்தி தணில் ஓவியம் எனத் திகழு
மேதகு குறத்தி திரு வேளைக் காரனே.
---.
5. பெருத்த வசன வகுப்பு
காபி - ஆதி
அருக்கன் உலவிய ஜக த்ரயமும் இசை
அதிற்கொள் சுவை என அனைத்து நிறைவதும்
அவச்தை பலவையும் அடக்கி அகிலமும்
அவிழ்ச்சி பெற இனிதிருக்கு மவுனமும்
அசட்டு வெறு வழி வழக்கர் அறுவரும்
அரற்று வன பொருள் விகற்பம் ஒழிவதும்
அழுக்கு மல இருள் முழுக்கின் உழல்வதை
அடக்கி அவனெறி கடக்க விடுவதும்,
(பெருத்த வசனமே அறுமுகவன்
பெருத்த வசனமே)
சந்த்ரகெளஞ்ச்
எருக்கும் இதழியு முடிக்கும் இறை குரு
எமக்கும் இறையவன் எனத் திகழு வதும்
இரட்டை வினை கொடு திரட்டு மலவுடல்
இணக்கம் அற ஒரு கணக்கை அருள்வதும்
இருக்கு முதலிய சமச்த கலைகளும்
இதற்க் இதெதிரென இணைக்க அரியதும்
இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர்
கடக்க விடுவதொர் இயற்கை அருள்வதும்
(பெருத்த வசனமே அறுமுகவன் பெருத்த வசனமே)
ரஞ்ஜனி
நெருக்குவன உபனிடத்தின் இறுதிகள்
நிரப்பு கடையினில் இருப்பை உடையதும்
நெருப்பு நிலம் வெளி மருத்து வனமென
நிறைத்த நெறி முறை கரக்கும் உருவமும்
நினைப்பு நினைவது நினைப் பவனும் அறு
நிலத்தில் நிலை பெற நிறுத்த உரியதும்
நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட
நிவிர்த்தி உற அனுபவிக்கு நிதியமும்
(பெருத்த வசனமே அறுமுகவன் பெருத்த வசனமே)
வசந்தா
உருக்கு திருவருள் திளைத்து மகிழ் தர
உளத்தொட் உரை செயல் ஒளித்து விடுவதும்
ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென
உடிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும்
உரத்த தனி மயில் உகைத்து நிசிசரர்
ஒளிக்க அமர்ப்பொரு சமர்த்தன் அணி தழை
உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன்
ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே
(பெருத்த வசனமே அறுமுகவன் பெருத்த வசனமே)
---.
6. வேடிச்சி காவலன் வகுப்பு
நீலாம்பரி - கண்ட சாபு (21/2)
உதர கமலத் தினிடை முதிய புவன த்ரயமும்
உக முடிவில் வைக்கும் உமை யாள் பெற்ற பாலகனும்
உமிழ் திரை பரப்பி வரு வெகு முக குலப் பழைய
உதக மகள் பக்கல் வரு ஜோதி ஷடானனும்
உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவர்
ஒருவர் ஒருவர்க் அவணொர் ஓர் புத்ரன் ஆனவனும்
உதய ரவி வர்க நிகர் வன கிரண விர்த்த விதம்
உடைய சத பத்ர நவ பீடத்து வாழ்பவனும்
உறை சரவணக் கடவுள் மடுவில் அடர் வஜரதரன்
உடைய மத வெற்புலைய வேதித்த வீரியனும்
உரைபெற வகுத் அருணை நகரின் ஒரு பத்தன் இடும்
ஒளிவளர் திருப் புகழ் மதாணி க்ருபாகரனும்
உரக கண சித்த கண கருட கண யக்ஷ கணம்
உபனிடம் உரைத் தபடி பூஜிக்கும் வானவனும்
ஒருவனும் மகிழ்ச்சி தரு குருபரனும் உத்தமனும்
உபயம் உறும் அக்னி கர மீதிற் ப்ரபாகரனும்
அதி மதுர சித்ர கவி நிருபனும் அகத்தியனும்
அடிதொழு தமிழ் த்ரய வினோத கலாதரனும்
அவரை பொரி எட்பயறு துவரை அவல் சர்க்கரையொட்
அமுது செயும் விக்ன பதி யானை சகோதரனும்
அவுணர் படை கெட்டு முது மகரஜல வட்ட முடன்
அபயமிட விற்படை கொட் ஆயத்த மானவனும்
அருணையில் இடைக் கழியில் உரக கிரியிற் புவியில்
அழகிய செருத் தணியில் வாழ் கற்ப காடவியில்
அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தை களும்
அறியென இமைப் பொழுதின் வாழ் வித்த வேதியனும்
அரி பிரமருக்கு முதல் அரிய பரமற்க் உயரும்
அருமறை முடிப்பை உபதேசித்த தேசிகனும்
அமலனும் எனக்கரசும் அதிகுணனும் நிர்குணனும்
அகில புவனத் அமர சேனைக்கு நாயகனும்
அனுபவனும் அத்புதனும் அனுகுணனும் அக்ஷரனும்
அருமனம் ஒழிக்கும் அனு பூதி சுகோதயனும்
இதம் அகிதம் விட்டுருகி இரவு பகல் அற்ற இடம்
எனதற இருக்கை புரி யோகப் புராதனனும்
எனது மனசிற் பரம சுக மவுன கட்கம் அதை
யமன் முடி துணிக்க விதியா வைத்த பூபதியும்
எழுமையும் எனைத் தனது கழல் பரவு பத்தனென
இனிது கவி அப்படி ப்ரசாதித்த பாவலனும்
இமையவர் முடித் தொகையும் வனசரர் பொருப்பும் எனத்
இதயமு மணக்கும் இருபாத சரோருகனும்
எழு தரிய கற்பதரு நிழலில் வளர் தத்தை தழு
விய கடக வஜர அதிபாரப் புயாசலனும்
எதிரில் புலவர்க் குதவு வெளி முகடு முட்ட வளர்
இவுளி முகியை பொருத ராவுத்தன் ஆனவனும்
எழுபரி ரதத் இரவி எழு நிலமொட் அக்கரிகள்
இடர் பட முழக்கி எழு சேவற் பதாகையனும்
இணையிலியும் நிர்ப்பயனும் மலமிலியும் நிஷகளனும்
இளையவனும் விப்ரகுல யாக சபாபதியும்
மதுகையொடு சக்ரகிரி முதுகு நெளியப் புவியை
வளைய வரும் விக்ரம கலாப சிகாவலனும்
வலிய நிகளத் தினொடு மறுகு சிறை பட்டொழிய
வனஜ முனியை சிறிது கோபித்த காவலனும்
வரு சுரர் மதிக்க ஒரு குருகு பெயர் பெற்ற கன
வட சிகரி பட்டுருவ வேல் தொட்ட சேவகனும்
வரதனும் அனுக்ரகனும் நிருதர் குல நிஷடுரனும்
மனு பவன சித்தனு மனோதுக்க பேதனனும்
வயிர் இசை முழக்க மிகு மழை தவழ் குறிச்சி தொரும்
மகிழ் குரவையுட் திரியும் வேடிக்கை வேடுவனும்
மரகத மணிப் பணியின் அணிதழை உடுத் உலவும்
வனசரர் கொடிச்சி தனை யாசிக்கும் யாசகனும்
மதனன் விடு புஷப சர படலம் உடல் அத்தனையும்
மடல் எழுதி நிற்கும் அதி மோகத் தபோதனனும்
வரிசிலை மலைக் குறவர் பரவிய புனத் இதணில்
மயிலென இருக்கும் ஒரு வேடிச்சி காவலனே
---.
7. சேவகன் வகுப்பு
மாண்ட் - அங்கதாளம்
(141/2) 2 11/2 2 11/2 2 11/2 2 2
இருபிறை எயிரு நிலவெழ உடலம்
இருள்படு சொருபம் உடைக்கோ விடவே
இறுகிய கயிறு படவினை முடுகி
எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய்
அருமறி முறையின் முறை முறை கருதி
அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால்
அறிவொடு மதுர மொழியது குழறி
அவமரு பொழுதில் அழைத்தால் வருவாய்,
ஒருபது சிரமும் இருபது கரமும்
விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா
உரமது பெரிய திரிபுரம் எரிய
உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா,
மருவளர் அடவி வனிதையர் பரவ
மரகத இதணில் இருப்பாள் கணவா
வளை கடல் கதற நிசிசரர் மடிய
மலையொடு பொருத முழு சேவகனே
---.
8. புய வகுப்பு
ராகமாலிகை - (26) 2 11/2 2 4 11/2 11/2
2 2 11/2 11/2 11/2 21/2 21/2
யமுனா கலயாணி
வசை தவிர் ககன சர சிவ கரண மகாவ்ருத
சீல சால வரமுனி சித்தரை
அஞ்ஜல் அஞ்ஜல் என்று வாழ் வித்து நின்றன
மணிவட மழலை உடைமணி தபனிய நாண் அழ
காக நாடி வகை வகை கட்டு ம
ருங்குடன் பொருந்து ரீதிக் கிசைந்தன
வருணித கிரண வருணித வெகு தரு ணாதப
ஜோதி ஆடை வடிவு பெறப் புனை
திண் செழுன் குறங்கின் மேல் வைத் அசைந்தன
வளை கடல் உலகை வலம் வரு பவுரி வினோத க
லாப கோப மயில் வதனத்து வி
ளங்கும் அங்குசம் கடாவிச் சிறந்தன
வரை பக நிருதர் முடி பக மகர மகோததி
தீயின் வாயின் மறுக விதிர்த் அயில்
வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன
மதியென உதய ரவி என வளை படு தோல் வி
சால நீலமலி பரிசை படை
கொண்டு நின்ற் உழன்று சாதிக்க முந்தின
மன குண சலன மலினமில் துரிய அதீத சு
கானு பூதி மவுன நிரக்ஷர
மந்திரம் பொருந்தி மார்பில் திகழ்ந்தன
வகை வகை குழுமி மொகு மொகு மொகென அனேக ச
முக ராக மதுபம் விழச் சிறு
சண்பகம் செறிந்த தாரிற் பொலிந்தன
கமீர்க்கல்யாணி
மிசை மிசை கறுவி வெளிமுகட் அளவு நிசாசர
சேனை தேடி விததி பெறச் சில
கங்கணன் கறங்க மீதிற் சுழன்றன
வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூத பி
சாசு போத மிகு தொனி பற்றி மு
ழங்கு விஞ்சு கண்டை வாசிக்கை கொண்டன
வித மிகு பரத சுர வனிதையர் கண மேல்தொறும்
லீலையாக விமல ஜலத்தினை
விண் திறந்து மொண்டு வீசிப் பொலிந்தன
விதரண தருவின் மலரிடை செருகிய கூதள
நீப மாலை விபுதர் குலக் குலி
சன் பயந்த செங்கை யானைக் இசைந்தன
விகசித தமர பரி புர முளரி தொழா அபி
ராம வேடர் விமலை தினைப் புன
மங்கை கொங்கைக் கண்டு வேளைப் புகுந்தன
விதிர் தரு சமர முறி கர கமல நகாயுத
கோழி வீற விதரண சித்ர
அலங்க்ருதம் புனைந்து பூரித் இலங்கின
விரகுடை எனது மன துடன் அகில் பனினீர் புழு
கோடளாவி ம்ருகமத கற்புர
குங்குமன் கலந்து பூசித் உதைந்தன
வினைபுரி பவனி தொழுத் அழுத் உருகிய கோதையர்
தூது போகவிடு மது பக்ஷண
வண்டினன் திரண்டு சூழப் படிந்தன
பூர்விகல்யாணி
இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளி த
நாசி தேசி பயிரவி குஜஜரி
பஞ்சுரன் தெரிந்து வீணைக் இசைந்தன
இறுதியில் உதய ரவி கண நிகரென ஆறிரு
காது தோயும் இலகு மணிக் கன
விம்ப குண்டலங்கள் மேவிப் புரண்டன
எதிர் படு நெடிய தரு அடு பெரிய கடாம் உமிழ்
நாக மேகம் இடிபட மற்பொரு
திண் சிலம்ப் அடங்க மோதிப் பிடுங்கின
எழு தரும் அழகு நிறமலி திறல் இசையாக உ
தார தீரம் என உரை பெற்ற
அடங்கலும் சிறந்து சாலத் ததும்பின
இருள் பொரு கிரண இரணிய வட குல பாரிய
மேரு ஜாதி இனமென ஒத் உல
கங்கள் எங்கணும் ப்ரகாசித்து நின்றன
இயன் முனி பரவ ஒருவிசை அருவரையூட் அதி
பார கோர இவுளி முகத்தவள்
கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன
இபரத துரக நிசிசரர் கெட ஒரு சூரனை
மார்பு பீறி அவன் உதிரப் புனல்
செங்களன் துளங்கி ஆடிச் சிவந்தன
எவை எவை கருதில் அவை அவை தரு கொடை
யால் மணி மேகராசி சுரபி அவற்றொடு
சங்க கஞ்ச பஞ்ச சாலத்தை வென்றன
கல்யாணி
அசைவற நினையும் அவர் பவம் அகலவெ மேல்வரு
கால தூதரை உடையும் அப்படி
அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன
அகிலமும் எனது செயலலத் இலையென யானென
வீறு கூறி அறவு மிகுத் எழும்
ஐம்புலன் தியங்கி வீழத் திமிர்ந்தன
அனலெழு துவஜம் உடுகுலம் உதிர வியோமமும்
ஏழு பாரும் அசலமும் மிக்க பி
லங்களுங்க் குலுங்க ஆலித் அதிர்ந்தன
அடல் நெடு நிருதர் தளமது மடிய வலாரி தன்
வானை ஆள அரசு கொடுத் அப
யம் புகுந்த அண்டர் ஊரைப் புரந்தன
அடவியில் விளவு தள வலர் துளவு குரா மகிழ்
கோடல் பாடல் அளி முரல் செச்சை
அலங்கல் செங்க் கடம்பு நேசித் அணிந்தன
அரியதொர் தமிழ்கொட் உரிமையொட் அடிதொழுதே கவி
மாலை யாக அடிமைத் தொடுத்திடு
புஞ்சொல் ஒன்று நிந்தி யாமற் புனைந்தன
அழகிய குமரன் உமை திரு மதலை பகீரதி
மாதர் வாழும் அறுவர் ப்ரியப் படு
கந்தன் எந்தை இந்த்ர நீலச் சிலம்பினன்
அனுபவன் அனகன் அனனியன் அமலன் அமோகன்
அனேகன் ஏகன் அபினவன் நித்தியன்
அஞ்ஜலென் ப்ரசண்ட வாகைப் புயங்களே.
---.
9. கடைக்கணியல் வகுப்பு
கிந்தோளம் - ஆதி(திச்ர நடை) (12)
அலை கடல் வளைந்த் உடுத்த எழு புவி புரந்தி ருக்கும்
அரசென நிரந்த ரிக்க வாழலாம்
அளகை அரசன் தனக்கும் அமரர் அரசன் தனக்கும்
அரசென அறன் செலுத்தி ஆளலாம்
அடை பெறுவ தென்று முத்தி அதி மதுர சென் தமிழ்க்கும்
அருள் பெற நினைந்து சித்தி ஆகலாம்
அதிர வரும் என்று முட்ட அலகில் வினை சண்டை நிற்க
அடல் எதிர் புரிந்து வெற்றி ஆகலாம்
இலகிய நலம் செய் புஷபகமும் உடல் நிறம் வெளுத்த
இப அரசெனும் பொருப்பும் ஏறலாம்
இருவரவர் நின்றி டத்தும் எவர் எவர் இருந்தி டத்தும்
ஒருவன் இவன் என்ற் உணர்ச்சி கூடலாம்
எமபடர் தொடர்ந் அழைக்கில் அவருடன் எதிர்ந்துள் உட்க
இடி என முழங்கி வெற்றி பேசலாம்
இவை ஒழியவும் பலிப்பத் அகலவிடும் உங்கள் வித்தை
இனை இனிவிடும் பெருத்த பாருளீர்,
முலையிடை கிடந்த் இளைப்ப மொகு மொகென வண்டிரைப்ப
முகை அவிழ் கடம் படுத்த தாரினான்
முதலி பெரி அம்பலத்துள் வரை அசல மண்டபத்துள்
முனிவர் தொழ அன்று நிர்த்தம் ஆடினான்
முனை தொறு முழங்கி ஒற்றி முகிலென இரங்க எற்றி
முறை நெறி பறந்து விட்ட கோழியான்
முதியவுணர் அன்று பட்ட முதிய குடர் நன்று சுற்று
முது கழுகு பந்தர் இட்ட வேலினான்
மலை மருவு பைம்பு நத்தி வளரும் இரு குன்ற மொத்தி
வலிகுடி புகுன் திருக்கு மார்பினான்
மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர் முலை உண்டு முற்றும்
வடிவுடன் வளர்ன் திருக்கும் வாழ்வினான்
மலை இறை மடந்தை பெற்ற ஒரு மதலை என்ற் உதித்து
மலை இடியவுன் துணித்த தோளினான்
மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக் கண்
இயலையு நினைன் திருக்க வாருமே
(வித்தை இனை இனி விடும் பெருத்த பாருளீர்
கடைக் கண் இயலையு நினைன் திருக்க வாருமே)
---.
10. மயில் வகுப்பு
ராகமாலிகை - சதுச்ர ஏகம் (கண்ட நடை) (10)
பைரவி
ஆதவனும் அம்புலியும் மாசுற விழுங்கி உமிழ்
ஆல மருவும் பணி இரண்டும் அழுதே
ஆறுமுகன் ஐந்து முகன் ஆனை முகன் எங்கடவுள்
ஆமென மொழிந்த் அகல வென்று விடுமே
ஆர்க்கலி கடைந்த் அமுது வானவர் அருந்த அருள்
ஆதி பகவன் துயில் அனந்தன் மணி சேர்
ஆயிரம் இருந்தலை களாய் விரி பணன் குருதி
ஆக முழுதுன் குலைய வந்த் அறையுமே
நடபைரவி
வேத முழுதும் புகல் இராமன் ஒரு தம்பி மிசை
வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய்
வீசும் அரவன் சிதறி ஓட வரு வெங்கழுலன்
மேல் இடி எனும்படி முழங்கி விழுமே
மேதினி சுமந்த பெரு மாசுண மயங்க நக
மேவு சரணங்க் கொட் உலகெங்கும் உழுமே
வேலியென எண்டிசையில் வாழும் உரகன் தளர
வே அழல் எனும் சினமுடன் படருமே
ஆனந்தபைரவி
போதினில் இருந்த கலை மாதினை மணந்த உயர்
போதனை இரந்து மலர் கொண்டு முறையே
பூசனை புரிந்து கொடியாகி மகிழ் ஒன்று துகிர்
போல்முடி விளங்க வரும் அஞ்ஜம் அடுமே
பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
பூரண கணங்களொடு வந்து தொழவே
போரிடுவ வென்று வெகு வாரண கணங்கள் உயிர்
போயினம் எனும்படி எதிர்ந்து விழுமே
சிந்துபைரவி
கோதகலும் ஐந்து மலர் வாளி மதனன் பொருவில்
கோல உடலன் கருகி வெந்து விழவே
கோபமொடு கண்ட விழி நாதர் அணியும் பணிகள்
கூடி மனம் அஞ்ஜி வளை சென்று புகவே
கூவியிர வந்தம் உணர் வாழி என நின்று பொரு
கோழியொடு வென்றி முறை யும் பகருமே
கோலம் உறு செந்தில் நகர் மேவு குமரன் சரண
கோகனதம் அன்பொடு வணங்கு மயிலே
(குமரன் சரணம் அன்பொடு வணங்கு மயிலே
முருகன் சரணம் அன்பொடு வணங்கு மயிலே
குமரன் சரணம் அன்பொடு வணங்கு மயிலே)
---.
11. வீரவாள் வகுப்பு
பீம்பளாச் - கண்ட சாபு(21/2)
பூ வுளோனுக்கும் உயர் தேவர் கோனுக்கும் எழு
பூவில் யாவர்க்கும் வரு துன்பு தீர்த் திடுமே
பூத சேனைக்குள் ஒரு கோடி சூர்யப் பிரபை
போல மாயக் கரிய கங்குல் நீக்கிடுமே
பூதி பூசிப் பரமர் தோலை மேல் இட்ட தொரு
போர்வை போல் நெட்டுறை மருங்கு சேர்த் திடுமே
போரிலே நிர்த்தம் இடு வீர மா லக்ஷமி மகிழ்
பூஜை நேசித்து மலர் துமபை சாத் திடுமே
பாவ ருபக் கொடிய சூரனார் பெற்ற பல
பாலர் மாளத் தசைகள் உண்டு தேக்கிடுமே
பானு கோபப் பகைன்யன் மேனி சோரக் குருதி
பாயவே வெட்டி இரு துண்டமாக் கிடுமே
பாடுசேர் யுத்தகள மீதிலே சுற்று நரி
பாறு பேய் துய்த்திட நிணங்கள் ஊட்டிடுமே
பாடி ஆடிப் பொருத போரிலே பத்திர க
பாலி சூலப் படையை வென்றுதாக் கிடுமே
ஆவலாகத் துதி செய் பாவலோர் மெய்க் கலிக
ளாம் அகோரக் களை களைந்து நீக் கிடுமே
யாருமே அற்றவன் என்மீதொர் ஆபத் உறவ
ராமலே சுற்றிலும் இருந்து காத்திடுமே
ஆடல் வேள் நற்படைகள் ஆணை யாவுக்கு முதல்
ஆணையா வைத்து வலம் வந்து போற்றிடுமே
ஆல காலத்தை நிகர் கால சூலத்தையும்
அறாத பாசத்தையும் அரிந்து போட்டிடுமே
மேவலார் முப்புரமும் நீறவே சுட்ட ஒரு
மேருவாம் விற் பரமர் தந்த பாக்கியவான்
வேடர் மானுக்கும் உயர் தேவயானைக்கும் இசை
வேலர் தாளைத் தொழுத் உயர்ந்த வாழ்க் கையினான்
வீறு சேர் மிக்க கண நாதனார் எட்டு வகை
வீரர் நேயத் தமையன் என்ற தோட்டுணைவோன்
மேன்மையாம் லக்ஷ ரத வீரர் பூஜிக்க வரு
வீரவாகுத் தலைவன் வென்ற வாட் படையே
---.
12. திருப்பழனி வகுப்பு
மத்யமாவதி - சதுச்ர த்ருவம் 4 4 4 2 கண்ட நடை (35)
எந்த வினையும் பவமும் எந்த விடமும் படரும்
எந்த இகலும் பழியும் எந்த வழுவும் பிணியும்
எந்த இகழ்வுன் கொடிய எந்த வசியுன் சிறிதும் அணுகாமலே
எந்த இரவுன் தனிமை எந்த வழியும் புகுத
எந்த இடமுன் சபையில் எந்த முகமும் புகலும்
எந்த மொழியுன் தமிழும் எந்த விசையும் பெருமை சிதறாமலே
வந்தனை செய் துன் சரண நம்புதல் புரிந்த அருள்
வந்த் அனுதினன் தனிலும் நெஞ்ஜில் நினைவின் படி வ
ரந்தர உவந்தருள் இதம் பெறுவதன்றி நெடு வலை வீசியே
வஞ்ஜ விழி சண்டன் உறுகின்ற பொழுதுன் குமர
கந்த என நங்க் அறையவுன் தெளிவு தந்துயிர் வ
ருந்து பயமுன் தனிமையுன் தவிர அஞ்ஜலென வரவேணுமே
(முருகேசனே வரவேணுமே
முருகேசனே வரவேணுமே
முருகேசனே வரவேணுமே)
தன் தனன தன் தனன டிண்டி குடி டிண்டி குடி
குண்ட மட குண்ட மட மண்ட மென நின்று முர
சந்திமிலை பம்பைதுடி திண்டிம முழங்கும் ஒலி திசை வீறவே
தண்ட அமர் மண்டசுரர் மண்டை நிணம் என்றலகை
உண்டுமிழ்தல் கண்டமரர் இந்திரன் வணங்கு பத
தண்டை சிறு கிங்கிணி புலம்பிட வரும் பவனி மயில் வாகனா
சென் தளிரை முந்து படம் என்றுள மருண்டு நிறை
சந்தன வனன் குலவு மந்தி குதிகொண்ட் அயல் செ
றிந்த கமுகின் புடை பதுங்கிட வளைந்து நிமிர் மடல் சாடவே
சிந்திய அரம்பை பல விங்கனியில் வந்து விழ
மெங்கனி உடைந்த சுளை விண்ட நறை கொண்டு சிறு
செண்பக வனங்கள் வளர் தென் பழனியம் பதியின் முருகேசனே
(வரவேணுமே முருகேசனே
வரவேணுமே முருகேசனே
வரவேணுமே முருகேசனே)