MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    11.7 அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் (4169 - 4170 )


    திருச்சிற்றம்பலம்

    4169 மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கு அப்பால்
    முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
    நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
    நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும்
    பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை
    புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த
    சேவேந்து வெல் கொடியான் அடிச்சார்ந்தாரும்
    செப்பிய அப்பாலும் அடிச் சார்ந்தார் தாமே 11.7.1
    4170 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
    செற்றார் தம் புரம் எரித்த சிலையார் செல்வத்
    திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில்
    சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்டதொகு
    நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு
    முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல்
    கணமே உடன் செல்ல முடியாப் பேறு
    பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னைப்
    பிறவியினில் செய்த தவம் பெரியவாமே 11.7.2
    திருச்சிற்றம்பலம்
    பத்தராய்ப் பணிவார் சருக்கம் முற்றிற்று.

Goto Main book