11.3 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் (4157 )
திருச்சிற்றம்பலம்
4157 காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து
பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்தத்து
ஆரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள்
ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார் 11.3.1
திருச்சிற்றம்பலம்