MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    11.5 முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் (4160 - 4162 )


    திருச்சிற்றம்பலம்

    4160 எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதி கரித்து
    மெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே
    அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய்
    முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர் 11.5.1
    4161 தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம்
    வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின்
    விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப்
    பெரும் தகையார் குலப் பெருமை ஆம் புகழும் பெற்றியதோ 11.5.2
    4162 நாரணர்க்கும் நான் முகர்க்கும் அறிய ஒண்ணா
    நாதனை எம் பெருமானை ஞானம் ஆன
    ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும்
    அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின்
    காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள்
    கமல மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப்
    பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல்
    அறிந்தவாறு புகலல் உற்றேன் 11.5.3
    திருச்சிற்றம்பலம்


Goto Main book