MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    12.5 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் (4215 - 4226 )


    திருச்சிற்றம்பலம்

    4215 எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன் தன் சீர்
    திருத்தகும் யாழில் இட்டுப் பரவுவார் செழுஞ்சோணாட்டில்
    விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல்
    பருப்பதச் சிலையார் மன்னும் ஆலவாய் பணியச் சென்றார் 12.5.1
    4216 ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று
    பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கிக்
    காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து
    ஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார் 12.5.2
    4217 மற்றவர் கருவிப் பாடல் மதுரை நீடு ஆலவாயில்
    கொற்றவன் திருவுள்ளத்துக் கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம்
    அற்றைநாள் கனவில் ஏவ அருள் பெரும் பாணனாரைத்
    தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார் 12.5.3
    4218 அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிவை பாகன்
    தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே
    மன் பெரும் பாணனாரும் மா மறை பாட வல்லார்
    முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரைப் பாடுகின்றார் 12.5.4
    4219 திரிபுரம் எரித்த வாறும் தேர்மிசை நின்ற வாறும்
    கரியினை உரித்த வாறும் காமனைக் காய்ந்தவாறும்
    அரி அயற்கு அரிய வாரும் அடியவர்க்கு எளிய வாறும்
    பரிவினால் பாடக் கேட்டுப் பரமனார் அருளினாலே 12.5.5
    4220 அந்தரத்து எழுந்த ஓசை அன்பினில் பாணர் பாடும்
    சந்த யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கி அழியும் என்று
    சுந்தரப் பலகை முன்நீர் இடும் எனத் தொண்டர் இட்டார்
    செந்தமிழ் பாணனாரும் திரு அருள் பெற்றுச் சேர்ந்தார் 12.5.6
    4221 தமனியப் பலகை ஏறித் தந்திரிக் கருவி வாசித்து
    உமையொரு பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி
    இமையவர் போற்ற ஏகி எண்ணில் தானங்கள் கும்பிட்டு
    அமரர் நாடாளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார் 12.5.7
    4222 கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும்
    தாயின் நல்ல பெருங் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும்
    ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டுப் பாடக் கேட்டு அங்கண்
    வாயில் வேறு வடதிசையில் வகுப்பப் புகுந்து வணங்கினார் 12.5.8
    4223 மூலத் தானத்து எழுந்து அருளி இருந்த முதல்வன் தனை வணங்கிச்
    சாலக் காலம் அங்கு இருந்து தம்பிரான் தன் திரு அருளால்
    சீலத்தார்கள் பிரியாத திருவாரூரின் நின்றும் போய்
    ஆலத்தார்ந்த கண்டத்தார் அமரும் தானம் பல வணங்கி 12.5.9
    4224 ஆழி சூழும் திருத் தோணி அமர்ந்த அம்மான் அருளாலே
    யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான்
    காழி நாடன் கவுணியர் கோன் கமல பாதம் வணங்குதற்கு
    வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசைப்பாணர் 12.5.10
    4225 ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ்ப் பெரும் பாணர்க்கு
    ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும்
    மேன்மை பதிகத்து இசை யாழில் இடப் பெற்று உடனே மேயபின்
    பானற் களத்தார் பெருமணித்தில் உடனே பரமர் தாள் அடைந்தார் 12.5.11
    4226 வரும் பான்மையினில் பெரும் பாணர் மலர்த்தாள் வணங்கி வயல் சாலிக்
    கரும்பார் கழனித் திருநாவலூரில் சைவக் கலை மறையோர்
    அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற
    சுரும்பார் தொங்கல் சடையனார் பெருமை சொல்லல் உறுகின்றோம் 12.5.12
    திருச்சிற்றம்பலம்


Goto Main book