MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    12.2 மங்கையர்க்கரசியார் புராணம் (4189 - 4191 )


    திருச்சிற்றம்பலம்

    4189 மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம்
    வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி
    செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள்
    தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
    எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே
    இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள்
    பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார்
    கழல் எம்மால் போற்றலாமே 12.2.1
    4190 பூசுரர் சூளா மணி ஆம் புகலி வேந்தர்
    போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால்
    தேசுடைய பாடல் பெறும் தவத்தினாரைச் செப்புவது
    யாம் என் அறிந்து தென்னர் கோமான்
    மாசில் புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ வழித்துணையாய்
    நெடும் காலம் மன்னிப் பின்னை
    ஆசில் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல்
    அமர்ந்திருக்க அருளும் பெற்றார் 12.2.2
    4191 வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப் பொன்னி
    வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும்தங்கள்
    திருநாடு போற் செழியர் தென்னர் நாடு சீர்
    விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி
    ஒரு நாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு
    உடைகீளும் கோவணமும் நெய்து நல்கும்
    பெருநாமச் சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார்
    நேசர் திறம் பேசல் உற்றாம் 12.2.3
    திருச்சிற்றம்பலம்


Goto Main book