MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    8.7 சத்தி நாயனார் புராணம் (4039- 4045 )


    திருச்சிற்றம்பலம்

    4039 களமர் கட்ட கமலம் பொழிந்த தேன்
    குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசை
    அளவும் ஆணைச் சயத் தம்பம் நாட்டிய
    வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர் 8.7.1
    4040 வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம்
    பெரும் சிறப்புப் பெறப் பிறப்பு எய்தினார்
    விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும்
    அரும் சிலம்பு அணி சேவடிக்காள் செய்வார் 8.7.2
    4041 அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை
    இத்தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை
    வைத்த நாவை வலித்து அரி சத்தியால்
    சத்தியார் எனும் திருநாமமும் தாங்கினார் 8.7.3
    4042 தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
    வாங்க வாங்கும் தண்டு ஆயத்தினால் வலித்து
    தாங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன்
    ஓங்கு சீர்த் தொண்டின் உயர்ந்தனர் 8.7.4
    4043 அன்னதாகிய ஆண்மைத் திருப்பணி
    மன்னு பேருலகத்தில் வலி உடன்
    பண்னெடும் பெருநாள் பரிவால் செய்து
    சென்னி ஆற்றினர் செந்நெறி ஆற்றினர் 8.7.5
    4044 ஐயம் இன்றி அரிய திருப்பணி
    மெய்யினால் செய்த வீரத் திருத்தொண்டர்
    வையம் உய்ய மணிமன்றுள் ஆடுவார்
    செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர் 8.7.6
    4045 நாயனார் தொண்டரை நலம் கூறலார்
    சாய நாவரி சத்தியார் தாள் பணிந்து
    ஆய மா தவத்து ஐயடிகள் எனும்
    தூய காடவர் தம் திறம் சொல்லுவாம் 8.7.7
    திருச்சிற்றம்பலம்


Goto Main book